

இணையத்தில் ரசிகர்களை வியக்கவைத்து, யூடியூபில் பிரபலம் அடைந்து வரும் ராதிகா ஆப்தே நடித்த 14 நிமிட த்ரில்லர் வகை குறும்படம். | வீடியோ இணைப்பு கீழே.|
ராமர் கால் பட்டு கல்லாக இருந்த அகலிகை உயிர்பெற்ற கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இது ராமாயண காலக் கதை. இன்று இந்தக் கதை, ஒரு தரப்பினரால் பெண்ணியதுக்கு எதிரான கதையாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கௌதம முனிவரின் மனைவி அகலிகையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவன் இந்திரன். அவள் அழகை அனுபவிக்க வேண்டும் என வீட்டில் முனிவர் இல்லாதபோது வருகிறான். ஆனால், அவன் வந்தது அந்த முனிவரின் உருவத்திலேயே... அப்படியிருக்க குற்றம் இழைக்காத அகலிகை கல்லாகப் போகவேண்டிய தண்டனை ஏன்..?
தமிழ் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம்' தொடங்கி சமகால பெண்ணியவாதிகள் வரை எல்லோரும் கேட்கும் கேள்வி இதுதான்.
இக்கதையையே இயக்குநர், 'அகல்யா' குறும்படத்திறான கருவாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறும்படம், அந்தக் கதையை மிகவும் நவீனப்படுத்தியுள்ளது. கதையிலோ திரைக்கதையிலோ, வசனத்திலோ, காட்சி உருவாக்கத்தின் அழகியலிலோ மட்டுமில்லை... இன்றுள்ள பெண்ணியவாதிகளோடு மாற்றி யோசிக்கும் இளைய தலைமுறையினரின் புருவங்களையும் உயர்த்தும் விதமாக!
இங்கும்கூட போலீஸ் அதிகாரியாக வந்தவன் துப்பறியும் தனது கடமையிலிருந்து சற்றே நழுவிய அவனது மனதில் கள்ளம் புகுந்துவிட இங்கேயும் அந்த சாபம்... வேறு வடிவில்!
பண்பட்ட கௌதம் ஆக நடித்துள்ள சௌமித்திர சாட்டர்ஜி, அகல்யா எனும் இளம் மனைவியாக தோன்றி வசீகரித்த நின்ற ராதிகா ஆப்தே, இந்திரனாக வந்து தந்திரங்களில் சிக்கிய டொடா ராய் சௌத்ரி என மூன்றே கலைஞர்கள் முக்கியப் பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.
நகரில் சில நாட்களாக காணாமல் போன ஒருவனை போலீஸ் அதிகாரி தேடிவரும் விதமாக குறும்படத்தின் திரைக்கதை நம்மை திரைக்குள் இழுத்து நிறுத்துகிறது. ஒரு காவியக் கதையை துப்பறியும் கதைபோல மர்ம முடிச்சுகளை அவிழ்த்துச் செல்லும் இயக்குநர் சுஜாய் கோஷ்ஷின் இயக்கம் விறுவிறுப்பான ஹாட் கேக் குறும்படம் இதோ...
</p>