

அது ஓர் அழகான குடும்பம். கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னே நொறுக்குத் தீனி வகையறாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிறுவன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான்.
சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர். இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' என்ற அர்த்தம் கொண்ட படமொன்றைச் சொல்கின்றனர் பெற்றோர். அப்படியில்லை என்று மறுக்கும் சிறுவன், அதில் முதல் வார்த்தை மட்டும் என்கிறான்.
மாமாவா எனக் கேட்க ஆமாம் என்கிறான். அடுத்த வார்த்தை என்னவென்று அவர்களும் ஆர்வமாய்க் கேட்கின்றனர். தன் மீதே கைவைத்துக் கொள்ளும் சிறுவனைப் பார்த்து என்ன என்ன என்று பரபரக்கின்றனர். ஒரு வழியாய் மகன் தன்னைத்தானே குறிப்பிடுகிறான் என்பது அவர்களுக்குப் புரிகிறது.
முதல் வார்த்தை மாமா, இரண்டாவது என்னை, மூன்றாவது வார்த்தையில் என்ன இருக்கும் என யோசிக்கின்றனர். சிறுவனின் உடல்மொழி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல... நமக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.
நம் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வை ஊட்டும் அந்தக் குறும்படத்தை நீங்களே பார்த்துணருங்கள்...
</p>