Published : 15 Mar 2015 11:51 AM
Last Updated : 15 Mar 2015 11:51 AM

ஆன்ட்ரூ ஜாக்ஸன் 10

அமெரிக்காவின் 7-வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) பிறந்த தினம் இன்று (மார்ச் 15). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வட - தென் கரோலினாவின் எல்லைப் பகுதியில் பிறந்த வர் (1767) என்று கருதப்படுகிறது. பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தந்தை இறந்துவிட்டார். சிறு வயதில் முறையான கல்வி கற்க முடியவில்லை. 13-வது வயதில் அமெரிக்க புரட்சி யுத்தத்தில் உள் ளூர் போராளிக் குழுவில் இணைந் தார். சகோதரர்களில் ஒருவர் யுத்தத்தில் இறந்தார்.

* இன்னொரு சகோதரரும் இவரும் பிரிட்டிஷாரிடம் பிடிபட்டனர். சிறையில் பட்டினியும் சித்ரவதையும் அனுபவித்தனர். சிறையில் இருந்தபோது அம்மை நோய் கண்ட இவரது சகோதரர் இறந்தார். விரைவில் அம்மாவும் இறந்துவிட்டார். மாமாவால் வளர்க்கப்பட்ட இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

* அரசியலிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். 1796-ல் அமெ ரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த வருடமே செனட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். இந்தப் பதவியில் சிறிது காலமே நீடித்தார். எஸ்டேட் உரிமையாளராக இருந்த இவர், வர்த்தகமும் செய்து வந்தார்.

* 1801-ல் டென்னிஸி (Tennessee) போராளிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது இவரது அரசியல் மற்றும் ராணுவ வாழ்க்கையின் அடித்தளமாக அமைந் தது. டென்னிஸி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1804 வரை இந்தப் பதவியில் நீடித்தார். 1812-ல் நடைபெற்ற நியு ஆர்லியன்ஸ் போரில் 5000 படை வீரர்கள் கொண்ட இவரது படை 7500 வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் படையை எதிர்கொண்டு மகத்தான வெற்றி பெற்றது.

* யுத்த ஹீரோவாகப் போற்றப்பட்டார். தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1817-ல் இவர் தலைமையிலான படை ஃபுளோரிடா அனுப்பப்பட்டது. அதிலும் மகத்தான வெற்றிதான். ஃபுளோரிடா அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து புளோரிடாவின் ராணுவ கவர்னராக நியமிக்கப்பட்டார்.

* 1822-ல் அமெரிக்க செனட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1824-ல் ஆதரவாளர்கள் இவரது தலைமையில் ஒரு கட்சியைத் தொடங்கினர். அதுதான் பின்னாளில் ஜனநாயக கட்சியாக மாறியது. 1828-ல் அமெரிக்காவின் 7-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ‘மக்களின் ஜனாதிபதி’ என்று பெயர் பெற்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு விருந்தில் முதன் முதலாக பொதுமக்களை கலந்துகொள்ள வைத்தார். அரசுப் பதவிகள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார்.

* அரசுப் பதவிகளில் தேசபக்தர்களுக்கு முதலிடம் அளித் தார். போரில் காயமடைந்த, ஊனமுற்ற போர் வீரர்களுக்கு பதவிகளில் முன்னுரிமை அளித்தார். இவரது ஆட்சி காலத்தில், 1830களில் தேசிய பொருளாதாரம் அபார வளர்ச்சி கண்டது.

* அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக 1835-ல் நாட்டின் அனைத்து கடனும் அடைக்கப்பட்டது. இரண்டா வது முறையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எட்டு வருடங்கள் இவர் ஆட்சியில் நீடித்தார். மிகவும் செல்வாக்கு மிக்க ஜனாதிபதியாக இவர் கருதப்படுகிறார்.

* வக்கீல், அரசியல்வாதி, நீதிபதி, நில உரிமையாளர் மற்றும் வர்த்தகர் என்று தான் ஈடுபட்ட அனைத்துக் களங்களிலும் பிரகாசித்த ஆண்ட்ரு ஜாக்சன் 1845-ல், 78-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x