Last Updated : 08 Feb, 2015 10:13 AM

 

Published : 08 Feb 2015 10:13 AM
Last Updated : 08 Feb 2015 10:13 AM

சொல்லத் தோணுது 21: போலிகளின் காலம்!

உணவின் தேவை எவ்வளவு தவிர்க்க முடியாததோ அது போலவே மருந்தின் தேவையும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. உயிர் பயம் வந்தால் மருத்துவரிடம் செல்லாத வர்கள் யாராவது இருக்க முடியுமா? அதுவரை, தான் சம்பாதித்த எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, உயிர் பிழைத்தால் மட் டும் போதும் என எண்ணும் நிலைதான் இறுதி நிலையாக இருக்கிறது.

மருந்து மாத்திரைகளை எப்போது உண்ணத் தொடங்குகிறார்களோ அப் போதே அவர்களின் இறப்பின் நாட்களும் நெருங்குகிறது என நான் அண்மையில் சந்தித்த ஒருவர் கூறினார். மருந்தில் இருக்கின்ற அசலும் போலியும் நம்மைப் போன்றவர்களுக்குத் தெரிவதே இல்லை.

எனது நெருங்கிய நட்பில் மருந்தை அதிக அளவில் வாங்கி விற்பவரும், சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார் கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மருந்து என்கிற பெயரிலும், மருத்துவர் கள் என்கிற பெயரிலும் இயங்கிவரும் போலிகள் சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பை இழைத்துக்கொண் டிருக்கிறார்கள் என்பது பெருங்கவ லையை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பதெல்லாம் உடல் ஏற்றுக்கொள்ளாத வைகளை வெளியேற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது என்பது பலருக்கும் புரிவதில்லை. இது புரியாமல் உடனே மருந்து, மாத்திரை, மருத்துவர் எனத் தேடி ஓடி அதனைக் கட்டுப்படுத்தி விடுகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் உடல்கூறுகள் பற்றிய செயல்பாடுகள், கோளாறுகள், அதற்கானத் தீர்வுகளைப் பற்றிய அறிவை தொடக்கத்திலேயே பெற வேண்டிய இடம் கல்விக்கூடங்கள்தான். ஆனால், அப்படிப்பட்ட பாடத் திட்டங்களோ, அதனை சொல்லித் தருபவர்களோ இல்லை.

மக்களாட்சி என சொல்லிக்கொண்டா லும் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் இல்லாமல் கட்டாயம் தரப்பட வேண்டிய கல்வியும், மருத்துவமும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், அடிப் படைத் தேவைகளைக்கூட அதிகப் பணம் செலவு செய்துதான் ஒவ்வொருவரும் பெற வேண்டியிருக்கிறது.

அண்மைக் காலமாக அடிக்கடி செய்தி களில் காணக் கிடைக்கிற போலி மருத்து வர்களின் வேட்டை பற்றிய செய்திக்குப் பின்னால், கண்டெடுக்கப்பட வேண்டிய உண்மைகள் நிறையவே இருக்கின்றன.

மனது வைத்தால் போலி மருத்துவர் களை ஒரே நாளில் முடக்கிவிட முடி யாதா எனும் கேள்வி எழும்போது, அதற் கான சட்ட திட்டங்கள் முறையாக உருவாக்கப்படாததும், அதில் உள்ள ஓட்டைகள் அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப் பதும் தெரியவருகிறது.

மரபுமுறை மருத்துவத்தில் நாட்டமில் லாமல் இருப்பவர்கள், யாரோ உருவாக் கிய ஆங்கில மருந்து, மாத்திரைகளை யும், வெறும் சான்றிதழையும் மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சமூக அக்கறையின்றி திறனற்ற ஒரு சில ஆங்கில மருத்துவர்களிடம் சிக்கி சீரழிவதை, யார் நினைத்தாலும் காப் பாற்ற முடிவதில்லை. அவர்கள் கொடுக் கிற மருந்து, மாத்திரை, ஊசி என எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோம். குறிப்பாக அதிகப் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் என்றால் எதையும் கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்கிறோம். எது நல்லது, கெட்டது என்பதை நமக்கு சொல்ல யாருமே இல்லை. சோதனை எலி, பூனை, குரங்குகளுக்குப் பதிலாக அவர்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதுப் புது மருந்துக்கும் நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கடையில் 200 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மாத்திரை, இன்னொரு கடையில் 60 ரூபாய்க்குக் கிடைக்கிறது. விவரம் அறிந்தவர்கள் போலி மருந்து கம்பெனிகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். 200 ரூபாய் விற்கக்கூடிய அந்த மாத்திரையின் அடக்கவிலையே 30 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

எங்கேயாவது, சந்தேகத்துக்கு இடமா கப் பலியாகும்போதுதான் மருத்துவ ரைக் குற்றம்சாட்டி கேள்வி கேட்கி றோம். ஏற்கெனவே முறையற்ற மருத்துவத்தி னாலும், மருந்துகளாலும் சிறிது சிறிதாகக் கொல்லப்பட்டுதான் முழுமையாக அந்த உயிர் போயிருக்கிறது என்கிற உண்மை நமக்குப் புரிவது இல்லை.

முறையற்ற மருத்துவக் கல்வியை யும், அது உற்பத்தி செய்த மருத்துவர் களையும், முறைகேடாக அனுமதிப் பெற்ற மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் வளர்த்துக் கொண் டிருப்பதுப் பற்றி யாருக்கும் கவலை யில்லை. ஒவ்வொரு நொடியும் பலியா கிக் கொண்டிருக்கும் உயிர்களின் எண் ணிக்கை கணக்கில் வருவதும் இல்லை. காலங்காலமாக இவற்றுக்கு அனுமதி அளித்து வருபர்கள் நம் கண்களுக்குத் தெரிவதும் இல்லை.

எல்லா மருத்துவ சாதனைகளும், எல்லா கண்டுபிடிப்புகளுமே பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படு கிறது. தாங்கள் உருவாக்கிய, தாங்கள் அனுமதி கொடுத்த அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெறாமல் அத் தனை அமைச்சர்களும், அரசியல்வாதி களும் தனியார் மருத்துவமனைக்குத் தான் ஓடுகிறார்கள். இந்நேரத்தில், தன் உயிர் போகும் நிலை வந்தபோது கூட அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவேன் என அடம்பிடித்த தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அவர்களை நினைத்துக்கொள்கிறேன்.

சிறந்த மருத்துவம் என்றால் அது நக ரத்து மக்களுக்கு மட்டும்தான். சிறந்த மருத்துவர்கள் என்றால் அவர்கள் நக ரத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பதை, கடந்த இரண்டு வாரங்களாக நேரில் கண்டுவருகிறேன். படுக்கையில் விழுந்துவிட்ட என் அம்மாவுக்கு ஊசி போட, சிறிய சிறிய சோதனை செய்ய. நாடிப் பிடித்துப் பார்க்கக் கூட மருத்துவர் கள் இல்லாமல், அலைந்து தவித்ததை என்னால் கூறாமல் இருக்க முடிய வில்லை.

எனக்கு நேர்ந்த அவலம் நாள்தோறும் இந்நாட்டில் கோடிக்கணக்கான கிராம மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடியேதான் இருக்கப் போகிறோமா? என்னுடைய கவலையை யும், ஆதங்கத்தையும் தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரியிடம் தொலைபேசி யில் பகிர்ந்து கொண்டதைத் தாண்டி, எதையும் என்னால் செய்துவிட முடியவில்லை.

மக்களாட்சி முறை என்பதே எல்லா மக்களும் எல்லாவற்றுக்கும் உரிமை யுள்ளவர்கள் என்பதுதான். 67 ஆண்டுகள் கடந்தும் இது நிகழ்ந் திருக்கிறதா?

ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர் களுக்கு ஒன்று, நகர மக்களுக்கு ஒன்று. கிராமத்து மக்களுக்கு ஒன்று என்றால், எதற்கு இப்படிப்பட்ட இந்த மக்களாட்சி ?

அன்புமணி இராமதாசு சுகாதார அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையில் அதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் பல சீர்திருத்தங்களை யும், சில நல்லத் திட்டங்களையும் கொண்டு வந்தார். அதில் ஒன்று: இள நிலை மருத்துவம் படித்தவர்கள் மேற்படிப்புப் படித்து மருத் துவராக தொழிலைச் செய்ய வேண்டு மென்றால் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் கிராமப் புறங்களில் மருத்துவ சேவை புரிந்திருக்க வேண்டும் .

இந்தியா முழுக்க மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இறுதியில் அந்தந்த மாநில அரசுகளால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்கள். படித்து முடித்த பிறகு கிராமத்தில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் மக்களுக்கு மருத்துவம் பார்த்ததால்தான் அன்புமணிக்கும் மக்களின் பிரச்சினை புரிந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த கால தமிழக அரசு அந்தச் சட்டத்தை ஆதரிக்காமல் எதிர்த்தது. அன்புமணி இராமதாசு கொண்டுவந்த ‘108 அவசர ஊர்தி சேவை’ மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல். இதிலும் அவசர உடனடி மருத்துவம் அளிக்கப்பட வேண்டியவர்களை, பெரிய அளவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொலைவில் உள்ள, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதால் பலரைக் காப்பாற்ற முடிவதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகளை யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அசலைவிட எல்லாத் துறைகளிலும் போலிகள் நிறைந்துவிட்ட காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x