Published : 16 Dec 2014 12:12 PM
Last Updated : 16 Dec 2014 12:12 PM

ஆர்தர் சார்லஸ் கிளார்க் 10

இங்கிலாந்தில் பிறந்து இலங்கையில் வாழ்நாளைக் கழித்த அறிவியல் நாவல், புதின எழுத்தாளர் சர் ஆர்தர் சார்லஸ் கிளார்க் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் சாமர்செட் கவுன்டியில் பிறந்தவர். படிப்பில் சுட்டி. கிடைக்கும் பொருட்கள், பார்க்கும் இடங்கள் என அனைத்தையும் கற்பனைக் கண் கொண்டு பார்ப்பது சிறு வயதில் இருந்தே வழக்கம்.

* முதல் உலகப்போரில் அப்பாவை இழந்தபோது, இவருக்கு வயது 13. வானியலில் ஈடுபாடு கொண்டவர், பழைய அமெரிக்க அறிவியல் புதினங்களைப் படித்தார். வறுமை யால் படிப்பை நிறுத்திவிட்டு, அரசுப் பணியில் சேர்ந்தார்.

* 17-வது வயதில் பிரிட்டன் கோள்கள்இயல் கழகத்தில் சேர்ந்தார். அதன் பொருளாளராகவும், தலைவராகவும் உயர்ந்தார். 1941-ல் அதில் இருந்து விடுபட்டு இரண்டாம் உலகப் போரின்போது ராயல் விமானப் படையில் சேர்ந்து பணியாற்றினார்.

* செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்பம், விண்கலம், அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், மின்னல் வேக தகவல் தொடர்பு, மனிதன் நிலவுக்குச் செல்வது ஆகிய அனைத்தையும் அவை நிஜ வடிவம் பெறுவதற்கு முன்பாகவே கற்பனையில் கட்டுரைகள், புதினங்களாக எழுதியவர்.

* போர் முடிந்ததும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் - கணிதவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ‘சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி னார். 1951 முதல் முழுநேர எழுத்தாளர் ஆனார்.

* கோள்களுக்கு இடையேயான தொடர்புக்கு, புவிநிலை செயற்கைக் கோள் பாதைகள் (Geostationary Satellite Orbit) குறித்த தொழில்நுட்பக் குறிப்புகள் கொண்ட தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 100 புத்தகங் களுக்கும் மேல் எழுதியுள்ளார். இவற்றின் கரு, அறிவியல் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டவை.

* 1953-ல் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தார். தன் கற்பனை, சிந்தனை, எழுத்துக்கு ஏற்ற அமைதியான இடமாக கொழும்பு நகரைத் தேர்ந்தெடுத்தார். 1964-ல் போலியோ தாக்கியதால் நடக்க முடியாமல் போய், சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழித்தார். இறக்கும் வரை, இலங்கையிலேயே இருந்தார்.

* இவரது முதல் புத்தகம் ‘பிரிலூட் டு ஸ்பேஸ்’. இவரது ‘எ ஸ்பேஸ் ஒடிஸி’ என்ற நாவல் திரைப்படமாக எடுக்கப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 2000-ம் ஆண்டில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. ‘ஸ்ரீ லங்காபிமன்யா’ என்ற இலங்கை அரசின் மிக உயரிய விருதைப் பெற்றுள்ளார்.

* எந்த அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் கற்பனை யில் இருந்தே தொடங்குகிறது என்பார்.

* எதிர்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை தொலை நோக்குடன் கற்பனை செய்து எழுதி, அவை நிஜமா வதையும் பார்த்து மகிழ்ந்த இந்த அறிவியல் தீர்க்கதரிசி 90-வது வயதில் மறைந்தார். ‘‘இலங்கையில் நீடித்து நிலைக்கிற நிரந்தரமான அமைதி திரும்பவேண்டும் என்பதே என் விருப்பம்’’ இது அவரது கடைசி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x