Last Updated : 24 Feb, 2014 07:26 PM

 

Published : 24 Feb 2014 07:26 PM
Last Updated : 24 Feb 2014 07:26 PM

தேவர் மகனும் ஸ்டேட்டஸ் சன்னும்!

இந்த Facebook-ல பொண்ணுங்க ஒரு Good Morning சொன்னாக்கூட 100, 200-ன்னு LIKE-ம் COMMENT-ம் விழுது. ஆனா, பசங்க என்னதான் Status போட்டாலும் 5, 10 Like-க்கு மேல தாண்டமாட்டேங்குது அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் புலம்பிகிட்டு இருக்கு.

இதனால வெறுத்துப்போன FB User ஒருத்தர் தன்னோட Account-ஐ Deactivate செய்துடலாம்னு முடிவெடுக்கிறார். இதைப்பத்தி Facebook Owner Mark-ம், FB User-ம் பேசிகிட்டா எப்படி இருக்கும்?

'தேவர் மகன்' படத்தில வர்ற Famous Dialouge-ஐ Use பண்ணி ஒரு Sentimental கற்பனை CHAT.

Mark: தம்பி!!! நாந்தேன்...

FB User: சொல்லுங்க Mark ஐயா..

Mark: Facebook-ல ரெகுலரா Status போடறீகளா தம்பி?

FB User: ஆமாங்கய்யா...

Mark: Facebook-ல நல்ல கருத்து யாரு போட்டாலும் Likes நெறைய விழும்னு ஆரம்பத்துல நெனச்சிட்டு இருந்தீகளே... இப்போ இந்த Facebook-கோட நெலமை புரிஞ்சுதா?

FB User: நல்லாவே புரியுதுங்கய்யா... நான் செஞ்ச தப்பும் புரியுது... அதனால இந்த Facebook-அ விட்டே போயிரலாம்னு இருக்கேன்.

Mark: (அதிர்ந்து) Facebook... Facebook-அ விட்டு போறீகளா..? ஹ... இங்க இருக்கவங்கள கவர்ற மாதிரி Status போட்டு Likes வாங்க வழி தேடாம... Facebook-அ விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை?

FB User: (உடனே) அதுக்காக....

Mark: அதுக்காக???

FB User: அதுக்காக... பொண்ணுங்க பேர்ல ப்ரொபைல் இருந்தா, அது Fake Idயா இருந்தாக்கூட, நெறய Likes-ம் Comments-ம் போட்டு ஜொள்ளுவிடுற ஆளுங்க நெறைய இருக்குற இந்த Facebookல, இன்னும் Status போடணும்னு நெனைச்சுகிட்டு இருக்கறது முட்டாள்தனம்.

Mark: இந்த கூட்டத்துல நானும் இருக்கேன்றத நீ மறந்துறாதீகப்பூ...

FB User: ஆனா ஐயா... அதை நெனச்சு பெருமைப்பட முடியலைங்கய்யா. பல ஜொள்ளருங்க இருக்கற இந்த Facebookல நான் Status போட்டு என் நேரத்தையும், அறிவையும் வீணாக்க விரும்பலைங்க ஐயா...

Mark: நெறைய ஜொள்ளரருங்க Facebookல இருக்காங்க... ஒத்துக்கறேன்... பல Websites Use பண்ணிப்பார்த்தும், பொண்ணுங்கள Contact பண்ண வழி தெரியாம பலபேர் Netல பல வருஷமா சுத்திட்டு இருந்திருக்காங்க. நா Facebook ஆரம்பிச்சதிலேயிருந்து அதை அதிகமா Use பண்றது உங்க நாட்டு பயகதேன். திடீர்னு அவன எல்லாத்தையும் விட்டுட்டு நல்ல Statusக்கு Like-ம் Comment-ம் போட வாடான்னா எப்படி வருவான்? நீ படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா... அவன அங்கே கூட்டிகிட்டு வா... ஆனா அந்தப்பய மெதுவாதான்பா வருவான்... மெதுவாதான் வருவான்.

FB User: மெதுவான்னா எம்புட்டு மெதுவா ஐயா? அதுக்குள்ள எனக்கு வயசாகி, நான் கடுப்பாகி Account-அ Deactivate செய்துருவேன் போல இருக்கே!

Mark: போ... Deactivate செஞ்சுட்டுப்போ... நான் தடுக்க முடியுமா? எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் Deactivate செய்ய வேண்டியதுதேன். Facebook-ல் Active-ஆ இருக்கறது முக்கியம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள Status நெறைய போட்டுட்டு Deactivate செஞ்சுட்டு போனா தான் அந்த Facebook Account-க்கே பெருமை. Status போட்டவுடனே எல்லாரும் படிக்கணும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நீ status போடறே. நாளைக்கு உன் பையன் படிப்பான்... அதுக்கப்புறம் அவன் பையன் படிப்பான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நீ இருக்க மாட்டே. ஆனா Status நீ எழுதுனது... அது இருக்கும். இதெல்லாம் என்ன பெருமையா? கடமை... ஒவ்வொரு FB User-ரோட கடமை!

FB User: ஆனா இந்த Facebookல என்னை மாதிரி ஆளுங்க எதப்பத்தி Status போட்டாலும் யாரும் படிக்கமாட்டேங்கறாங்களே. ஒரு நல்ல Status போடணும்னாக்கூட பொண்ணு பேர்ல Fake Id Create பண்ணி, அதுல எழுதவேண்டியதா இருக்குதே. அப்போதானே நம்ம மக்கள் உடனே படிக்கறாங்க. இப்படிப்பட்ட Facebookல எதபத்தி எழுதுனாலும் படிக்க மாட்டாங்கய்யா... என்ன விட்ருங்கய்யா... நான் போயிர்றேன்.

(Mark ஆவேசமாகிறார்)

Mark: இவ்ளோ நாள் Facebook use பண்ணிட்டு இப்போ இப்படிப் பேசற இல்ல...

FB User: இல்ல... அப்படி இல்லீங்கய்யா...

Mark: வேற எப்படி? வேற எப்படின்னு கேக்கறேன். யாருன்னே தெரியாத பல பொண்ணுங்களுக்கு பலதடவை Message அனுப்பியும், Friend Request கொடுத்தும் Torture பண்ணுனியே, இது வரைக்கும் ஒருதடவையாச்சும் உன்னை நான் பிளாக் பண்ணியிருக்கேனா? என்ன..? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன், நீ உன் கடமைய செஞ்சியா? நெறைய Girlfriends கூட இங்க மணிக்கணக்குல Chat பண்ணி ஜாலியா இருக்க விட்டேனே. எனக்கு என்ன செஞ்ச நீயி!!?? ஏதாவது பண்ணு... அதுக்கப்புறம் Facebook-அ விட்டு போ... Twitterல போயி பொண்ணுங்களை Follow பண்ணு... Life-அ என்ஜாய் பண்ணு... இல்லன்னா, கூகுள் பிளஸ்சுக்கு போயி குண்டு சட்டியில கும்மியடி... என்ன இப்போ... போயேன்...

FB User: நல்ல Status-அ Facebook-லதான் எழுதணும்னு இல்லை Mark ஐயா.. வெளியிருந்தும் எழுதலாம்... நான் போறேங்க Mark.

Mark: Facebookலே இருந்து எழுதறேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் இங்க உள்ளவங்களுக்கு முக்கியம்... இந்தா! எங்கேய்யா Admin? எலே யார்ரா அவன்... எங்கே Admin? (Admin-ஐ கூப்பிடுகிறார்)

Admin ஓடி வந்து பணிவாக: ஐயா..

Mark: இங்கே தான் இருக்கியா... இந்த FB User status போட வேற website போறாங்களாம்... ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்... அவரோட Account-அ Deactivate பண்ணிரு.

Admin: ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு Deactivate பண்ணட்டுமா?

Mark: ஏண்டாப்பு... ரெண்டு வருஷம் தங்க மாட்டீங்களா...?

Admin-ஐ அனுப்பி விட்டு FB User-ஐ கிட்டே அழைக்கிறார்.

Mark: ரெண்டு வருஷம் இருக்க மாட்டீகளா? (குரல் உடைந்து) உங்கள இங்க பல நல்ல Status எழுதவச்சு பாக்கணும், நெறைய பணம் சம்பாதிக்கணும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா? (ஃபீல் பண்றாரு) நீங்க Net எல்லாம் சுத்தி பல Website-ல Status எழுதி, Famous ஆகி வரும்போது Facebook இல்லாம போயிட்டா என்ன பண்ணுவீகப்பு..? (கண்ணீரை ரகசியமாகத் துடைத்துக் கொள்கிறார்)

FB User: ஐயா.. Mark ஐயா.. நான்.. உங்கள விட்டுட்டு போலீங்க.. வேற Website போய் பல Status எழுதி, Popular ஆனதும்.. உங்களையும்... கூட்டிட்டு போறேங்க...

Mark: என்னையா..? இந்தக் கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகி இந்த Facebookக்கு ஒரமாகுமே தவிர வெளியே வராது. இந்த மரத்தை வேரோட சாய்ச்சிடாதப்பு அம்புட்டுதான் சொல்லுவேன்... புரியுதா?

FB User: (உணர்ச்சிவசப்பட்டு) ஐயா... நான் இந்த உலகத்துக்கு நல்ல Status நிறைய எழுதுவேன்... என்ன நம்புங்க...

Mark: உங்களத்தானே நம்பணும்! இந்த உலகத்துல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு... (நாக்கு தழுதழுக்கிறது) போ...

FB User: போகட்டுமா Mark?

Mark: போ...

(FB User தடுமாறி விழப்போக, Mark பதறி Power Fluctuation வந்த UPS-ஆக வெலவெலத்து) பாத்து.. பாத்து..

FB User: ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்ல...

Mark: பாத்து போங்கப்பு...

(FB User பலத்த emoticons-சோடு போகிறார்.)

பின்னணி இசை.

(FB விட்டு போனான் மானமுள்ள ஆசாமி... ஏங்குதய்யா பாவம் Netizens-ன் சாமி...)

வெ.பூபதி,வலைஞர், தொடர்புக்கு boopat23@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x