Published : 12 Jun 2016 12:29 PM
Last Updated : 12 Jun 2016 12:29 PM

ஒரு கவிதை நூல்: இடைத்தங்கல்

பறவைகள் தங்கள்
கூடுகளை
அடைந்துகொண்டிருந்த
அந்தி மாலையில்
பூமியை எட்டிப் பார்க்க
முதலில் உதித்த குட்டி விண்மீனின்
குரலைப் போலிருந்தது
உன் மெளனம்

விடிவிடியென்று
இரவைத் துன்புறுத்தாமல்
குடி குடியென்று மலர்ந்த
உன் உதடுகள் குடித்து
முடிக்கும் முன்னமே வந்துவிட்டது அதிகாலை

அதற்கு முன் நான் பார்த்ததில்லை
ஒரு பனித்துளிக்குள்
இத்தனை சூரியன்களை

நான் நன்றி கெட்டவனாக இருக்கலாம்
என்றாலும்
என்றென்றும் நன்றியுடன் இருக்கும்
என் காதல்.

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஜெ.பிரான்சிஸ் கிருபா
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
விலை :ரூ 330

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x