Published : 17 Sep 2016 11:57 AM
Last Updated : 17 Sep 2016 11:57 AM

நெட்டிசன் நோட்ஸ்: பெரியார்- நெட்டில்லா காலத்துப் போராளி!

செப். 17 - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியாருக்கு வாழ்த்துச் சொல்லி நெட்டிசன்கள் ட்விட்டரில் >#HBDPeriyar என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>கில்லர்

தமிழ் இனத்திற்கு சுயமரியாதை கற்றுத்தந்த கலகக்காரன்! என் இனத்தின் நந்தாவிளக்கு, தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தந்தை பெரியார்! #HBDperiyar

>Doha

”உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” - பெரியார்.

>பித்தன்

எண்ணிய எண்ணியாங்கு பேசியவன், என்றும் பேசப்படுபவன் ! #HBDPeriyar

>Sahoo :p ‏@sahoodmail

நாடு போற்றும் சிறந்த தலைவர்களுள் ஒருவர் தந்தை பெரியார், பகுத்தறிவுவாதி.. வாழ்த்துக்கள் #HBDPeriyar

>மது ‏

புரட்டாசியும் இன்றுதான் பிறக்கிறது. புரட்டு ஆசிகளை நம்பாதே என்பவரும் பிறந்த தினம் இன்று. #HBDPeriyar

>Cine Tent ‏

மதங்களை கடந்த மாமனிதர் அய்யா பெரியாரின் பிறந்த நாள் இன்று...

>Siva

"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்

>SumiSumathi

ரெண்டாயிரம் வருஷ மனு ஆட்சியை / கடவுள் நம்பிக்கைய 90 வருஷம் மட்டுமே வாழ்ந்த ஒரு கிழவனால் ஆட்டிப்படைக்க முடிந்ததே, இதுவே பெரியாரின் வெற்றி...

>Jokin Jeyapaul

பெரியார் எனும் பெயரை உச்சரித்தால் இன்னும் சிறியவர்களுக்கு எரிச்சல் வருகிறது. அது தான்உங்கள் வாழ்நாள் சாதனை. #HBDPeriyar

>ஓலைக்கணக்கன்

என்ன வேணா செஞ்சிருக்கட்டும், உன் அறிவுக்கு ஒத்துக்க முடியலேன்னா கேள்வி கேளுன்னு சொன்னார் பாருங்க. அது ஒண்ணு போதும். #hbdperiyar

>புகழ்

பக்தி வந்தால் புத்தி போகும்.. புத்தி வந்தால் பக்தி போகும்..- தந்தை பெரியார்.

>ராவணன் ‏

பக்தி என்பது தனிசொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. #HBDperiyar

>ஆ இளங்குமரன்

என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல்... தந்தை பெரியார் #HBDPeriyar

>navaneetha

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.

>ஆ இளங்குமரன் ‏

அன்று இடுப்பில் கட்டிய துண்டு, இப்போது நம் தோளில் இருக்க காரணமே பெரியார் தான்

>ரா.கிருஷ்ணமூர்த்தி

ராகுல் சர்மா, கிஷோர் ரெட்டி, அங்கித் கவுடாக்களுக்கு மத்தியில் நான் சுப்ரமணியனாக மட்டுமே.. நன்றி #HBDPeriyar

>Arun Nedunchezhiyan

எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை..

>Sudhakar Ganesan ‏

தமிழ் நாட்டில் எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்குள் சென்று கும்பிட காரணமானவர் கடவுள் மறுப்பாளர் பெரியார்.

>அறந்தை மணி

எவரொருவர் பெயரைக் கேட்டால், சாதி, மதம், இனம் கடந்து ஒரு இனம்புரியாத உணர்வுடன் மனிதம் தழைக்க நினைக்கிறதோ அங்கு வாழ்கிறார் பெரியார்.

>arulselvam ‏

மண்டைச்சுரப்பை உலகு தொழும், தூய தாடி மார்பில் விழும், அவர்தாம் பெரியார்.

>Doha Talkies ‏

“பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் நானும் அருவாள், கம்பைத் தூக்கிக் கொண்டுதான் திரிந்திருப்போம்” - மூப்பனார்.

>Thadagam Mugund

பெரியாரும் - ஒரு பெரியவாள் தானே;

ஆம்; அவர் நம் -

பேதமைகளை அரிந்தெடுத்த

பெரிய வாள்தானே !- வாலி

>வரிப்புலி

தாழ்த்தப்பட்டோர்க்கு "ஐயா, சாமி, துரை" என்று பெயரிட்டு எல்லோரையும் அழைக்க வைத்தவரின் பிறந்தநாள். #HBDperiyar

>Manikandan ‏

தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவன் அயோக்கியன் எனில், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் - பெரியார்.

>kiramaththan

எல்லோர்க்கும் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் கேள்விகள் கேட்டவன் நீ! #HBDPeriyar

>Satheesh Kumar ‏

30+ மாநிலங்கள். தமிழகம் பலவற்றில் முன்னணி. மிகப்பெரும்பான்மையான பட்டதாரிகள். வேற்றுமையற்ற சகோதரத்துவம். நீர் அதன் முதல் புள்ளி. #HBDPeriyar

>karthik tpr ‏

தன் மக்களின் சூத்திர பட்டம் நீங்க, 95 வயதிலும் மூத்திர சட்டியை கையில் ஏந்தி இன உணர்வூட்டிய கொள்கைக்குன்று, தந்தை பெரியார்.

>Doha Talkies

“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை; அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க!” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சொன்னது.

>வெள்ளந்தி

திராவிடர்கள் வணங்க வேண்டிய உண்மையான கடவுள். #HBDperiyar

>ரெவுனி

பெரியார், ஒருதடவ அந்த பேரை மனசுக்குள்ள சொல்லிப்பாரேன், உன்னையே நீ புதிதாய் உணர்வாய்!

>govikannan

தமிழ்நாட்டின் பெருமைக்கு தாடி வைத்த இந்த இருவரே போதுமானது, வள்ளுவர் மற்றும் பெரியார். #hbdperiyar

>Lakschumi

ஏதோ பெண் சுதந்திரமென பிதற்றுகிறோம் இன்னும் ஒரு நூறாண்டு இருந்திருக்கலாம்; அந்த வெண்தாடிக் கிழவன். #HBDPeriyar

>ச ப் பா ணி ‏

இணையம் இல்லாத காலத்துலேயே போராடியவர். #HBDPeriyar

>roshanriswan

மானம் கெடுப்பாரை, அறிவைத் தடுப்பாரை, மண்ணோடு பெயர்த்தெடுத்த கடப்பாரை!

வானம் உள்ளவரை, வையம் உள்ளவரை யார்தான் மறப்பார் நம் பெரியாரை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x