Published : 13 Sep 2016 03:23 PM
Last Updated : 13 Sep 2016 03:23 PM
காவிரி பிரச்சினையில் கோபத்தை வெளிக்காட்டும் விதம் தவறு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பது:
"கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் நடந்து வரும் சம்பவங்களைக் கேட்டால் வலிக்கிறது. ஆம் சர்ச்சை இருக்கிறது, நமது உரிமைக்காக போராட வேண்டும், நீதியைக் காக்க போராட வேண்டும். ஆனால் அது பேருந்துகளை எரிப்பதன் மூலம், பொதுச் சொத்தை அழிப்பதன் மூலம், நமது சொந்த சகோதர, சகோதரிகளை தாக்குவதன் மூலம் அது நடக்கக்கூடாது. நமது அடுத்த தலைமுறை எப்படிப் போராட வேண்டும் என்பதற்கு இதையா எடுத்துக்காட்டாக சொல்லப் போகிறோம்?
நாம் முதலில் மனிதர்கள். அரசியல் தலைவர்கள், அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. அவர்கள் மூலம் நீதியை நாடுவோம். இந்த விஷயத்தில் மக்களின் கோபம் புரிகிறது. ஆனால் அதை வெளிக்காட்டும் விதம் தவறு. நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டாம்.
இந்த கலவரத்தில் ஈடுபடுபவர்களையும், வதந்திகளை பரப்புபவர்களையும் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து இவற்றை நிறுத்துங்கள். மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள். நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
Let's seek justice ... But not with such inhuman violence. It's painful to see children terrified. PEACE pleassss >pic.twitter.com/sLMcCmWlL8
— Prakash Raj (@prakashraaj) >September 12, 2016
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT