Published : 06 Jan 2017 12:42 PM
Last Updated : 06 Jan 2017 12:42 PM

நெட்டிசன் நோட்ஸ்: விவசாயிகள் மரணம் - உரக்கப் பேச தயக்கம் ஏன்?

தமிழகத்தில் பருவமழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றியதாலும், டெல்டா பாசனத்துக்கான அணைகள் மூடப்பட்டதாலும்,சம்பா சாகுபடியும், விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழப்பதும், சிலர் தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்ந்து வருகிறது.

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதுகுறித்த நெட்டிசன்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை #StandWithFarmers #SaveFarmers என்ற ஹேஷ்டேகுகளில் பதிவிடப்பட்டு வருகின்றனர். >GOVT PLS SAVE TN FARMERS என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. அவற்றில் பதிவிடப்பட்ட கருத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sangeeth @sangeethsachin1

ஊர்ப் பசி போக்க

தன் பசி மறந்தவனுக்கு

பட்டினிச் சாவு !

The Princess ‏@rajakumaari

அதிகாரிகள், அரசியல்வாதிகள் இப்பதான் ஒவ்வொருத்தரா வாயத்திறக்குறாங்க. #StandWithFarmers

sindhan ‏@sindhan

#STANDWITHFARMERS விவசாயமில்லையேல் உணவில்லை என்று கூறாதீர்கள், இறக்குமதி செய்து லாபம் பார்க்கலாம் என்னும் மரண வியாபாரிகளின் ஆட்சி இது.

tharaipitha ‏@tharaipitha4

கட்சி தலைவர் இறந்தால் தமிழகமே ஸ்தம்பிக்கிறது; 100 விவசாயிகள் மரணம் எந்த சலனமும் தராதது வேதனை! இதுதான் ஆட்சியர்களின் சாதனை!

A.G.S @gunam121

நீராதாரத்தைப் பெருக்காமல் விவசாயத்தை செய்பவர்களின் தற்கொலையை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.

அருண் குமார் @KnightLord28

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை. உழவு இல்லையேல் உணவில்லை, உணவின்றி உயிரில்லை.

சாம் மகேந்திரன் ‏@Sam_Mahenthirn

அரசாங்கம் வாக்கை மட்டும் மனதில் வைத்து திட்டம் இடுவதால் தொலைநோக்குப் பார்வை இருப்பது இல்லை. #StandWithFarmers

Sakthi ‏@Sakthi_Ind

இது விவசாயிகளின் பிரச்சனை அல்ல. இந்தியாவின் பிரச்சனை. சோறு உண்ணும் அனைவரின் பிரச்சனை. #StandWithFarmers

Dhoni ஆழ்வார் ‏@Green_Tamil

சட்டசபையைக் கூட்ட இதைவிட பெரிய காரணம் தேவையா? உடனே சட்டசபையை கூட்டி விவாதித்து நிவாரணம் தொடங்க வேண்டும்.

ர. சகுபர் சாதிக் அலி @sathik_wisdom

மத்திய அரசால் விவசாயிகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட கிஷான் தொலைக்காட்சியில் தமிழில் ஆலோசனை வழக்கபடுவதில்லையே? #STANDWITHFARMERS

டெல்டாகாரன் ‏@kvijaimba

இதுவரை வேலை நிறுத்தம் செய்யாத ஒரே உழைப்பாளி விவசாயி தான்.

சோறுபோடும் விவசாயிகளின் உழைப்பு உன்னதமானது.

dinesh ‏@sadha09

சோறு போடறவங்கள சாமியா பாக்கலேன்னாலும் மனுசனாவாவது மதிச்சு காப்பாத்தணும். #GOVT PLS SAVE TN FARMERS

Naveen KK (@Naveenkk10):

நேற்றும் இன்றும் உழவர்கள் சாகிறார்கள் உழவுக்கு வழியின்றி.....!

நாளை நீங்கள் சாவீர்கள் உணவுக்கு வழியின்றி......! #StandWithFarmers

நிலாக்காதலன்®(velu) ‏@Nilakathalan_ve

மக்கள்தான் அரசு; மக்களுக்காகதான் அரசாங்கம்னு சொல்லிட்டு விவசாயிகளை வேற்றுக்கிரவாசியாக பார்ப்பது வேதனை அளிக்கிறது.

Prem Kanthan @prem_kanthan

விளைவிக்கும் பொருளுக்கு விலையை விவசாயி நிர்ணயம் செய்யும் வரை இதே நிலைதான்.

சாம் மகேந்திரன் ‏@Sam_Mahenthirn

எந்த ஒரு மாணவனின் கனவும் கைதேர்ந்த நல்ல ஒரு விவசாயியாக, விவசாய புரட்சியாளனாக ஆகவேண்டும் என இருப்பதில்லை. #StandWithFarmers

கலகக்கண்மணி! (@_EnCounter):

இது நாடு தழுவிய அளவில் கவன ஈர்ப்பையும், தீர்வு நோக்கிய நெருக்கடிக்கும் அழைத்து செல்லட்டும்! நலம் உண்டாகட்டும்!

UshaNandhini:-) ‏@usha_twits

விவசாயம் அரசு பணியாக அறிவிக்கப்பட்டிருந்தால் இத்தனை இழப்புகள் வந்திருக்குமா???? #STANDWITHFARMERS

Dear Zindagi ‏@kavi_vtya

தடுப்பணைகள் அமைத்து தண்ணீர்த் தட்டுபாட்டைத் தடுக்க வேண்டும். #STANDWITHFARMERS

நல்லவன் ‏@rajarajan1975

வழங்கப்படும் நிவாரணம் நேரடியாக, நேர்மையாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

சு.மணி தமிழன் ‏@enthamizh

மக்களின் உயிர் காக்க..

மண்ணில் உழைப்பவன் #விவசாயி

Kevin ‏@lsmlpoosai

அரசாங்க அதிகாரிகளே நீங்கள் விவசாயம் செய்ய வேண்டாம்..,

விவசாயிகளிடம் அரசியல் செய்யாமல் இருங்கள்..

Joe Selva ‏@joe_selva1

யாரும் விவசாயத்துக்கு போராட வேணாம்; கொறஞ்சபட்சம் நமக்கு சாப்பாடு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கிடைக்க போராடுவோம்.

arjun v ramamoorthy @arjun_v_ram

நிகழ்கால சிக்கலை மக்களிடம் சென்று சேர்ப்பது மட்டுமல்ல, வருங்காலத்தில் அதற்கான தீர்வினையும் ஆராய்தல் வேண்டும்!

S.Raja ‏@SRajaJourno_PT

அரிசி என்பது நீங்கள் வாங்கும் மளிகைக்கடையிலோ அல்லது அரிசிமண்டிகளிலோ விளைவதல்ல.

அது விவசாயியின் வியர்வையில் விளைவது!

M lingeswaran ‏@lingesind

விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தர வேண்டும்.. #StandWithFarmers

செல்வா பிரவின் ‏@selvapraveen25

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்கு பதிலாக விவசாயத்தை சொல்லிக் கொடுங்கள்..

ஏனெனில், ஸ்கோரை விட? சோறு முக்கியம்!

Joe Selva ‏@joe_selva1

இன்றைக்கு விவசாயம் அழிஞ்சா அது இந்த தலைமுறையை பாதிக்குதோ இல்லையோ அடுத்ததலைமுறை இருக்குமா என்பதே சந்தேகம்.

சாம் மகேந்திரன் ‏@Sam_Mahenthirn

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு விளைநிலங்கள் எடுக்கும் போது விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் APJ அப்துல்கலாம்.

Prakash Thiru ‏@iamprakashthiru

நாட்டுல வேசம் கட்றவங்களுக்கு குரல் கொடுக்க ஆளிருக்கு...

விவசாயம் பண்றவங்களுக்கு குரல் கொடுக்க தயக்கம் மட்டுமே இருக்கு. #வேதனை

D Latha Prabhu

தமிழகத்தில் ஆற்றில் மணல் அள்ளுவதை ஐந்து வருடங்களுக்கு முற்றிலும் தடை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

Raja (@SRajaJourno_PT)

நகரத்து நண்பர்களே உங்களுக்கும் உணவு கிராமங்களிலிருந்துதான் வருகிறது. இனியும் வரவேண்டுமென்றால் கைகொடுத்து காப்பாற்றுவாய்.

உலகிற்கு உயிரூட்டும் உழவும், உழவரின் உயிரும் முக்கியமல்லவா?

Ramkumar ‏@RamkumarOffl

கலப்பைகள் கூட

கவலை கொள்ளும் இவர்களின்

களைப்பறியா உழைப்பு கண்டு!

வைரவேலு மணிமொழி ‏@Vairavel12

அரசின் அனைத்து திட்டங்களும் சலுகைகளும் விவசாயிகளுக்கு எளிதில் நேரடியாக சென்றடைய வேண்டும். #STANDWITHFARMERS

Sindhan Ra

விவசாயம், நீர் வள பாதுகாப்பு, மண் வள மேம்பாடு, காடு வளர்த்தல், உயிர்ச் சூழலியல் என கல்வியிலும் தீர்வுகள் விதைக்க வேண்டும்.

Vijay Manick

தாய் தந்தை இல்லை எனில் நீ, நான் இல்லை, விவசாயிகள் இல்லை என்றால் உயிரே இல்லை #StandWithFarmers

manikandan ‏@manikan22226932

பொங்கல் கொண்டாட விளையாததால்

போகியை கொண்டாட

தயாராகிறான் விவசாயி

விவசாயத்தைக் கொளுத்தி!!!

ரவுடி ‏@JackPolladhavan

ஊருக்கே சோறு போடுறவங்க விவசாயிங்க.. தன்னம்பிக்கையோடயும் தைரியத்தோடயும் இருக்கனும்.. தற்கொலை எதுக்கும் முடிவு இல்ல..

R Chandrasekaran ‏@rakkichandra

பயிர் வளர்க்க வாங்கி வைத்த உயிர்கொல்லி மருந்துகள் இன்று உழவரின் உயிர்பறிக்கும் அவலம்.

Revathi. PT ‏@RevathiPT

நீ இன்றி அமையாது இவ்வுலகு.....

"விவசாயம்"

முத்து தல ரசிகன் ‏@muthuthalarasig

விவசாய பயிர்களைத் தான் காப்பாற்ற முடியலை; விவசாயியையாவது காப்பற்றுவோம். #StandWithFarmers

Surendar Gsr ‏@surendar090195

நிவாரணம் மட்டும் நிரந்நர தீர்வு ஆகாது; நீர் மேலாண்மை வேண்டும்.

Suresh Manthiram ‏@sureshtnindia

பன்னாட்டு , உள்நாட்டுக் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். #StandWithFarmers #SaveFarmers

Tamilisai Soundrajan

விவசாயிகளின் வலியைப் போக்க வலிமையாக போராட உறுதியேற்கிறேன்...பயிர் மகிழ்ச்சியே உயிர் மகிழ்ச்சி. உழவர் மகிழ்ச்சியே உயர்மகிழ்ச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x