நெட்டிசன் நோட்ஸ்: அண்ணா பிறந்த நாள் - குரலால், எழுத்தால், ஆண்ட மன்னன்

நெட்டிசன் நோட்ஸ்: அண்ணா பிறந்த நாள் - குரலால், எழுத்தால், ஆண்ட மன்னன்
Updated on
2 min read

மறைந்த முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவருமான  அண்ணாவின் 110-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அண்ணாவின் சாதனைகளையும், அவரது பிரபலமான கவிதைகளையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Stalin Raj

‏காஞ்சி தந்த காவியத் தலைவன் பேரறிஞர் பெருந்தகை #அண்ளாவின் 110-வது பிறந்த நாளில் வணங்குவோம்.

Aakash Johannes Russell

‏இந்தியா,

மறந்த மறைத்த,

ஓர் சகாப்தம்!

பேரறிஞர் அண்ணா!

இதுவும் கடந்து போகும்

‏முன்னோர்கள் இவ்வழி சென்றனர், எனவே அடியேனும் அவ்வழியே என்று ஆராயாது சொல்வது விஷய விளக்கமல்ல, விவேகமல்ல , வாதமுறையும் ஆகாது. அது , கேவலம், மூடநம்பிக்கை..

 _அறிஞர் அண்ணா

Kalai

உணவின்றி உடையின்றி ஏழைகள் தவிக்க, அந்த ஏழைகளின் தோள் மீது அமர்ந்தபடி , அடிக்கடி ஊர்கோலம் வருகிறாரே அவர்களின் துயரம் தீர்க்காத ஆண்டவன் .. இது தகுமா..?

_பேரறிஞர் அண்ணா

Jaguar Jerry

‏உம்மை இகழ்ந்து

பேச நினைப்பவர்கள்- கூட

உம்மை அண்ணா என்று

உம் பெயரை

புகழ்ந்து அழைத்துதான்

பேச முடியும்.

Ravi Raju

‏பெரும்பான்மையினரால் பேசப்படுவதால் இந்தி பொதுமொழியாக்கப்பட்டது என்பதற்கு அண்ணாவின் பதில்

“ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே

சகாவே

‏ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு அதற்குப் பெயர் மதம்..

உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் அதற்கு பெயர் சாதி..

பகற்கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் அதற்கு பெயர் பூஜை, சடங்கு, தட்சணை..

Arthi Sankar

‏அன்புள்ள தம்பி,

      மக்களிடம் செல்,

     அவர்களுடன் வாழ்,

     அவர்களிடமிருந்து கற்றுக்கொள்,

     அவர்களை நேசி,

     அவர்களுக்கு சேவை செய்,

    அவர்களுடன் சிந்தனை செய்,

    அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு,

அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்.

நித்யா

‏அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வைசியன். குரலால், எழுத்தால், ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாள்.

RAJU

‏பெரியார் என்னும் காட்டாற்று வெள்ளத்தின் மதகாக இருந்தவர் அண்ணா..

jawahar parthiban

‏இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற தகுதியைப் பெறுமேயானால், இந்தியாவின் ஒற்றுமை மிக விரைவில் சீர்குலையும்.- அறிஞர் அண்ணா

Ram Thirumurugan

‏ஓராண்டுக்கு முன்னால் நான் பதவிக்கு வந்தேன். மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரம். இரண்டு தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம்.மூன்று தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என இருமொழிக் கொள்கை அறிவிப்பு.

தமிழ்

‏இந்தியாவின் தலைசிறந்த

அறிவாளியான

அரசியல் வித்தகர்

தந்தை பெரியார்

‏மனிதா!

நீ யாருக்கும் தலை வணங்காதே

நிமிர்ந்து நட! கைவீசிச் செல்!

உலகைக் காதலி!

செல்வரை, செருக்குள்ளவரை,

மதவெறியரைத் தள்ளி எறி!

மனசாட்சியே உன் தெய்வம்!

உழைப்பை மதி, ஊருக்குதவு.

உனக்கு எட்டாத

கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!

சிந்தனை செய்! செயலாற்று.

Akura

‏மனிதா!

நீ யாருக்கும் தலை வணங்காதே

நிமிர்ந்து நட!

கைவீசிச் செல்!

உலகைக் காதலி!

Murali

‏ஒரு ஜனநாயக சமுதாயத்தில் கருத்துகளைச் சொல்வதற்கு தடையோ சுதந்திர உணர்வுக்குஅழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

#HBDAnna

king No 4

‏மதராஸி சென்னைன்னு இருந்த பேர தமிழ்நாடுன்னு மாற்றியவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in