Published : 19 Dec 2018 12:15 PM
Last Updated : 19 Dec 2018 12:15 PM
யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்கத் தவறியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
ஐபிஎல் 2018 ஏலத்தில், மொத்தம் 60 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 40 இந்தியர்கள், 20 அயல்நாட்டு வீரர்கள். மொத்தம் செலவழிக்கப்பட்ட தொகை: ₹1,06,80,00,000
இதில் பெரும் ஆவலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் யுவராஜ் ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரூ.1 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது. இதனால் பெரும் ஏமாற்றத்துகுச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தார்கள்.
யுவராஜை எடுக்காமல் மோஷித் ஷர்மாவை எடுத்திருக்கிறீர்கள் என்று ஒருபுறம் சண்டையிட, மற்றொரு பக்கம் எங்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டீர்கள் என்று வருத்தமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் வசைகளை ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக, ’ மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தில் வடிவேலு , காய்த்ரி ஜெயராம் சண்டை நடக்கும்போது ஒருகட்டத்தில் வடிவேலு காயத்ரி ஜெயராமிடம் NO BAD WORDS, MUMMY PAAVAM ... என்று கூறுவார்.
இந்தக் காட்சியை ரசிகர்களுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டது.அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே தங்கள் கோபத்தை சிறிது பொறுத்துக் கொண்டனர்.
— Chennai Super Kings (@ChennaiIPL) December 18, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT