Published : 26 Oct 2018 01:32 PM
Last Updated : 26 Oct 2018 01:32 PM

இளையராஜா பாட்டைப் பாடி யானையைத் தூங்க வைத்த பாகன்: கேரளாவில் நெகிழ்ச்சி

தூங்காமல் முரண்டு பிடித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பாகன்.

வீடியோவில் கேரளாவைச் சேர்ந்த பாகன் ஒருவர், பிரபல தாலாட்டுப் பாட்டான ''அல்லி இளம் பூவோ'' என்ற மலையாளப் பாட்டைப் பாடி தனது யானையை உறங்க வைக்கிறார். குறிப்பாக யானையின் தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தவாறே பாடுகிறார் பாகன். யானையும் சுகமாகப் படுத்தவாறே பாட்டை அனுபவிக்கிறது.

இந்த வீடியோ சீன ஊடகங்களால் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவைக் காண

1984-ல் வெளிவந்த 'மங்களம் நேருன்னு' என்னும் படத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. மம்முட்டி நடித்த இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. தாலாட்டுப் பாடலான 'அல்லி இளம் பூவோ', விரைவிலேயே கேரள மக்களின் தாலாட்டுப் பாடலாக மாறியது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x