உனக்கென்ன உனக்கென்ன... - ஐபிஎல் ஏலமும் நெட்டிசன்களும்!

உனக்கென்ன உனக்கென்ன... - ஐபிஎல் ஏலமும் நெட்டிசன்களும்!

Published on

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கிவிட்டாலே சமூக வலைதளங்கள் முழுவதும் ‘ஐபிஎல்’ பதிவுகளால் நிரம்பி வழியும். அதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்தது அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலம் நிகழ்வு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற இந்த ஏலத்தில், இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்கிற பெருமை இப்போது இவருக்குச் சொந்தம்.

ஏலம் நடைபெற்ற இரண்டு நாள்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது ஐபிஎல்தான். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவு என நாட்டில் விவாதிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் ஐபிஎல் ஏலம் பற்றிய அப்டேட்டுகளிலும், கிரிக்கெட் அணி ரசிகர் மோதல்களிலும் பிஸியாகிவிட்டனர் பெரும்பாலான நெட்டிசன்கள். ‘உனக்கென்ன உனக்கென்ன... என்ன நடந்தால் உனக்கென்ன? இந்த ஐபிஎல் ரசிகர்களின் உலகமே தனி’ போன்ற பதிவுகளும் கண்ணில் சிக்கின!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in