Published : 15 May 2018 04:13 PM
Last Updated : 15 May 2018 04:13 PM
எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எழுத்தாளர் பாலகுமாரனின் மரணம் குறித்தும் அவரது அவரது படைப்புகள் குறித்து வாசகர்களும், நெட்டிசன்களும் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
sujatha ramesh
எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகத்திற்கும் வாசகர்களுக்கும் பேரிழப்பு. அவர் எழுத்து ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Hari
பெண் விடுதலை/சுதந்திரம் பற்றி லெக்ஷ்மி, அனுராதா ரமணன் போன்றோர் சொல்லியும் கேட்காத பல ஆண்களை... தாயுமானவராக ஆக்கியவர் பாலகுமாரன்....
Gurusamy Manikandan
உங்கள் இழப்பு எங்கள் குடும்பத்திற்கும் எங்கள் தமிழ் மொழி ஆளுமைக்கு பேர் இழப்பு #BalaKumaran ஐயா...
sujatha ramesh
#Balakumaran அவர் இறந்தாலும் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்வார்!!!
அன்புடன் பாரதி
எழுத்தாளர்களை மட்டும் பூஜித்த
கடைசி தலைமுறையின்
கடைசி எழுத்தாளர்!!
Alex Pandian
இரும்பு குதிரைகள்
மெர்க்குரிப் பூக்கள்
உடையார்
தாயுமானவன்
பச்சை வயல் மனது
...
...
எண்ணற்ற புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் .. !!
falseDilemma
அப்பம் வடை தயிர்சாதம்.. பாலக்குமாரன்
Satheesh Kumar
எனக்கு ஜார்ஜினாவை அறிமுகப்படுத்தியவர் (பயணிகள் கவனிக்கவும்)
எனக்கு யோகி ராம் சூரத் குமார் பற்றி புரியவைத்தவர்
இலக்கியம், வரலாறு, நவீனம், வாழ்வியல் பற்றிய என் பார்வைகளை மாற்றியவர்
தமிழக எழுத்துலகில் மிக முக்கியமான மாணிக்கம்
CSK ராட்சசன்
பொன்னியின் செல்வன் படித்தாகிவிட்டது. இதில் என்ன இருக்கபோகிறது என்றுதான் உடையார் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.. இரண்டாம் பக்கத்தை கடந்தபோதே சோழதேசத்திற்கே சென்றுவிட்டேன்
Alex Pandian
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல (நாயகன்)
நான் ஒரு தடவ சொன்னா... நூறு தடவ சொன்ன மாதிரி (பாட்ஷா)
சந்தோஷமோ கோபமோ ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடலாமே (காதலன்)
ஜென்டில்மேன், ஜீன்ஸ் என சிந்துபைரவி, புன்னகை மன்னன்...
கார்த்தி
எழுத்துலகில் ஒரு சகாப்தம்
நிலாவன்
இலக்கிய வாசிப்புக்கு முதல் சாளரம்.. அன்றைக்கு ‘போராடும் பெண்மணிகளி’ல் ஆரம்பித்தது தான் என்னை இலக்கிய உலகத்திற்கு தள்ளியது. அந்த நன்றி என்றும் பாலகுமாரனுக்கு உண்டு என்னிடம்.
கார்த்திக் கண்ணதாசன்
நீதிமன்றத்தில் சத்தியம் என்பது சம்பிரதாயம்...
#சிட்டிசன் #RIP #Balakumaran
நா. ப. மணிகண்டன்
பாலகுமாரன் என்ற எழுத்துலகம்,
விண்ணுலகம் சென்றது..
Shankar
உடையார் ஒன்றே போதும் !!
AR Bharaty
உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் #Balakumaran சார்!
ஒரு தடவ சொன்னால் நூறு தடவ சொன்னமாதிரி முதல்! பல வசனங்களின் கைத்தட்டலுக்கு சொந்தக்காரர்!
NELLAIseemai/நெல்லைச்சீமை
தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
Kandeeban
உடையாரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் என்னை உறைய வைத்தவன் இன்று உலகையே உறைய வைத்து விட்டு இறையடி சேர்ந்தார் ..
கார்த்திக் கண்ணதாசன்
மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினால் மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது, முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்தை மாற்ற முடியும்
பாரத்...பாரதி...
ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில்,
ஆசைப்பட்ட விதத்தில்,
கிடைக்காமல் போவது தான் வாழ்க்கையின் சுவாரஸியம்!
- பாலகுமாரன்.
விடியலைதேடி
எண்ணங்களை எழுத்தாகவும்,
எழுத்தினை எண்ணமாகவும் மாற்றி எழுதி மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
J.Vimal Adithyan
எனது சோழனை பற்றி ரத்தமும் சதையுமாய் எழுதிய எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். ஆனாலும், என்றும் அவர் படைத்த படைப்பிலும், அவர் எழுதிய எழுத்துக்களிலும் அழியாமல் இருப்பார் . எழுத்துக்கள் எல்லாம் தலை வணங்கும் நாள் இது.
TKo
#பாலகுமாரன். எனது ரசனையை வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர். இவர் கதைகளை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் அ.வேவுக்கு நன்றி.
கவிதா
செல்போன் வைத்திருப்பது வரமா, சாபமா?
"எல்லா வரமும் சாபம்தான். உபயோகப்படுத்துவதில் ஒழுக்கமில்லாத வரை"- பாலகுமாரன்
#குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்"- பாலகுமாரன்
காளையன்
பல வருடங்கள் க்ரைம் கதைகளில் லயித்திருந்த மனதை, அப்படியே ஆனந்த வயல்-இன் மூலம் திருப்பி,இனி அவரின் கதைகள் நூலகத்தில் இல்லை எனும் அளவுக்குத் தேடித்தேடி படிக்க வைக்கும் சித்து வேலை அறிந்த எழுத்துச் சித்தர் #பாலகுமாரன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
Sangeetha
மறைந்த பாலகுமாரன் அவர்களை அடையாளப்படுத்தவும் நாலு திரைப்படங்கள் தான் தேவைப்படுகின்றது சில ஊடகங்களுக்கும், மனிதர்களுக்கும் #
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..
தெரு குழல்விளக்கில்
முட்டிமுட்டிப்
பால்குடிக்கும்
விட்டில் பூச்சிகள்!!!
இசை S D
எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது வாசக ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இலக்கியம், திரைத்துறை என இரண்டிலும் தனிமுத்திரை பதித்தவர்.
அன்புடன் பாலு
நானே எனக்கொரு போதிமரம்..!
வினோத்
ஏறி வந்த ஏணி. சென்று வாருங்கள் பாலகுமாரன்.
இனி வரும் புத்தகக்கண்காட்சிகளிலும் நீங்கள்தான் சூப்பர்ஸ்டார்!
silva stunt
தன் எழுத்தின் மூலம் என் வாழ்க்கை முறையை மாற்றியவர்#பாலகுமாரன் RIP
சால்ட்&பெப்பர் தளபதி
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கண்ணீர்த் தருணங்களில் பாலகுமாரன் உடனிருந்திருப்பார்
NARAYANAN THIRUPATHY
என் அபிமான,மிக சிறந்த எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.
Raji
உம் பிரிவு
இலக்கிய உலகில்
அஸ்தமனமே..
நோயால் வதங்குவதை விட
விடைபெறல் மேலென
சென்றீரோ..
உம் ஆத்மா
அமைதியுற
இறையடி பணிகிறேன்..
ஆன்மீக அன்சாரி மஸ்தான்
என் எழுத்து ஆசான் , என்னை எழுத தூண்டிய வித்தகன் அருமையான உரைநடை எழுத்தாளர் பாலகுமாரனின் ஆத்மா நிம்மதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆழ்வார்க்கடியான்
கரையோர முதலைகள்
ஆனந்த வயல்
இரும்புக் குதிரைகள்
அப்பம், வடை, தயிர்சாதம்
பாலகுமாரன் அவர்களது அருமையான படைப்புகள் !
Ravikumar
ஏழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் என்ற செய்தி மனதை சங்கடப்படுத்துகிறது. மெர்க்குரிப்பூக்கள் தொடராக வந்தபோது வாரா வாரம் காத்திருந்து வாங்கிப்படித்த கல்லூரி காலம் நினைவில் நிழலாடுகிறது. அவரது ஆன்மீக ஈடுபாட்டையும் தாண்டி அவரது எழுத்தை ரசிக்க முடியும்.
Jarvis
வாழ்வில் ஒருமுறையேனும் தஞ்சை பெருவுடையாரை தரிசித்து விடுங்கள் ~ பாலகுமாரன்
Harisudhan
எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு... அவரின் நிறைய கதைகள் கட்டுரைகள் படித்து பொழுது ஓட்டியதும்.. அவரின் உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழன் புதினங்களும் அவரின் படைப்புகளில் சிறந்தது.. சில விஷயங்களில் அவரிடம் வேற்றுமை கொண்டாலும் - அவரின் எழுத்துகள் என்றுமே மறக்க இயலா.. :(
Balaji
குறுநாவல்களில் புத்துணர்வைப் பூட்டிய எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு
அப்பாவி
அன்பு. இதுவே என் கதையின் பிரதானம்..இதுவே எல்லோருடைய தேவையாயும் போதுமானதாயும் இருக்கிறது. இது கிடைத்துவிட்டாலே சமுதாயம் சீராகிவிடும். மக்கள் நிம்மதியாய் வாழ்வர் - எழுத்தாளர் பாலகுமாரன் #RIP
CSK நாத்திகன்
சுஜாதாவுக்கு முன்னாடி பாலகுமாரன் தான் ஷங்கருக்கு முதுகெலும்பா இருந்தாரு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT