Published : 13 Sep 2020 05:31 PM
Last Updated : 13 Sep 2020 05:31 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை)

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -

நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். அலுவலக நெருக்கடிகள் தீரும். பணி தொடர்பாக கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். சீரான வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளுக்கு தக்க உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
திட்டமிட்ட காரியங்களிலும் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நாள். பணவரவு பல வழிகளிலும் வரும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

புதன்-
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நல்ல சிந்தனைகள் தோன்றும். அது தொடர்பான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

வெள்ளி-
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றமான செயல்கள் நடக்கும். தேவையான பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள். துர்கை கவசம் படியுங்கள். நன்மைகள் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************

உத்திரட்டாதி -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அதிக லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான சலுகைகள், உதவிகள் தேடி வரும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பற்றிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். அதன் தொடர்பாக இன்று நல்ல தகவல் கிடைக்கும்

செவ்வாய் -
முடிக்க வேண்டிய வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

வியாழன்-
பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கையும் உண்டு.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தந்தைவழி உறவுகள், மற்றும் நெருங்கிய உறவினர்களால் நன்மைகள் நடக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். மன சங்கடங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர்கள், மகான்கள் போன்றோரை வணங்குங்கள். ஜீவ சமாதிகளுக்குச் சென்று தியானம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
**************

ரேவதி -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களில் உங்கள் பொருட்களில் கவனம் அவசியம்.

அலுவலக வேலைகளில் இயல்பான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

பெண்களுக்கு சொந்த வீடு, வேலை போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தங்கள் அகன்று குடும்ப ஒற்றுமை பலப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலக வேலைகளில் தேங்கி நின்ற பணிகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

செவ்வாய்-
எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவீர்கள். தற்போது பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளை எடுப்பீர்கள். தொழில் தொடர்பாக புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனைகளைச் செய்வீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

புதன்-
நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். அதிக முயற்சிகள் இல்லாமலேயே அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். தொழிலுக்கு ஏற்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் இன்று முழுமையாக அகலும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் இன்று மனநிறைவுடன் முடிவுக்கு வரும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.


வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய நாள். வாகனங்களைச் சரியாகப் பராமரியுங்கள். அலுவலகத்தில் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி-
குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது சிறப்பைத் தரும். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x