Published : 24 May 2020 12:24 PM
Last Updated : 24 May 2020 12:24 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
குடும்பத்தில் சுமுகமான நிலை தொடரும். ஆனால் யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும்.
உத்தியோகத்தில் இயல்பான நிலை தொடரும். ஒருசிலருக்கு பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்காலம் குறித்து திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு உபயோகப் பொருட்களில் திடீர் செலவுகள் ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணத்தை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம்
சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
**********************************


மிருகசீரிடம் -
நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். குடும்பத்தில் ஒரு சில சச்சரவுகள் தோன்றும். நிதானத்தைக் கடைபிடித்து சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள்-
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன்-
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும்.

சனி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும்.

ஞாயிறு-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. அக்கம்பக்கத்தினருடன் தேவை இல்லாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
***********************************


திருவாதிரை -
நினைத்தது நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.
தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சில பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகளிலிருந்து மாற்று மருத்துவத்தால் சரியாகும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வக் குறைவு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

செவ்வாய்-
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதளவில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று செயல்படுத்திப் பார்க்க முயற்சி செய்வீர்கள்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
தொழில் தொடர்பாக, நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
குடும்ப உறவுகள் பலப்படும். மனதிலிருந்த அச்ச உணர்வுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயல்கள் நடைபெறும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராகியின் மூல மந்திரத்தை உச்சரியுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடந்தே தீரும்.
**********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x