Published : 20 Apr 2020 12:42 PM
Last Updated : 20 Apr 2020 12:42 PM

மூலம், பூராடம், உத்திராடம் ; (ஏப்ரல் 20 முதல் 26 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
கடந்த சில மாதங்களாக இருந்த நெருக்கடிகள் அகலும்.
மனதில் இனம்புரியாத பயம் இருந்திருக்கும், அந்த பயம் இப்போது விலகி இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை இனி இருக்காது. புதிய நம்பிக்கை பிறக்கும். ஆனாலும் மனதில் ஒரு சில குழப்பங்களும் கேள்விகளும் இருந்து கொண்டே இருக்கும்.
அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு சிலர் ஏற்கெனவே இருக்கும் வங்கிக் கடனில் கூடுதலாக கடன் பெறவும் வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

செவ்வாய்-
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு அந்த முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபார இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

புதன்-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.


வியாழன்-
உத்தியோகத்தில் பணி மாற்றம் வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்புகள் செய்யும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் மாறும்.

சனி-
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்தினருக்கு ஆடை ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.

ஞாயிறு-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருப்பதும், குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவதும் நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீகாளிகாம்பாள் அன்னையை வணங்குங்கள். ஸ்ரீ காளிகாம்பாள் அன்னையை மனதில் நினைத்து வணங்கினாலே போதும் பிரச்சினைகளும் குழப்பங்களும் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
******************************

பூராடம் -
முயற்சிகளால் வெற்றி காண வேண்டிய வாரம்.
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அவசரமான முடிவுகளை எடுக்கக் கூடாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும், பணவரவு மனநிறைவைத் தரும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் இப்பொழுது மனத் திருப்தி தரும் வகையில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது, மேலும் சில நாட்கள் பொறுத்திருந்தால் அந்த வாய்ப்புகள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனக்கவலைகள் அதிகமாகும். தேவையில்லாத சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அலுவலகப் பணியில் கூடுதல் சுமை ஏற்படும்..தொழில் வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். எதிர்பார்த்த வருமானம் இருக்கும்.

செவ்வாய்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரிகளிடம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன்-
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.

வியாழன்-
கடந்த சில தினங்களாக இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகை கிடைக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய பணம் வந்துசேரும்.

சனி-
வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணியை இன்று நிறைவு செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வீடு மாறும் எண்ணம் ஏற்படும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் கேளுங்கள். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
***********************

உத்திராடம்-
அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும். ஆனாலும் ஒரு சில மன குழப்பங்கள் ஏற்படும்.
மனதில் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படும். எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவார்கள்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அரசு வழி உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். பழைய வங்கிக் கடன் அடைத்து புதிய கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.

செவ்வாய்-
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் இழுபறியாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

புதன்-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். உங்கள் நிலைமையை குடும்பத்தார் இப்போதுதான் அறிந்து கொள்வார்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.

வியாழன்-
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கையாள வேண்டும். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் தொடர்பாக தள்ளிப்போன சந்திப்பு இன்று நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

சனி-
நீண்ட நாளாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் இன்று நிறைவேறும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இந்த நாளை கழிப்பீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பண உதவி இன்று கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x