Published : 11 Mar 2021 10:41 AM
Last Updated : 11 Mar 2021 10:41 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள், மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
14ம் தேதி சூர்யன் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரவு அதிகமாகும்.

சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் அகலும்.
ராசிக்கு 11ல் சூரியன், புதன், சுக்கிரன் பார்வை விழுவதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் முதலானவை வந்து சேரலாம்.
குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

அரசியல்வாதிகளுக்கு மன நிம்மதி ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்குங்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
**************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
14ம் தேதி சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு ஏழில் சஞ்சாரம் செய்வதால் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகமான நிலை காணப்படும்.

சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க தடங்கல்கள் நீங்கும். பணவரத்து கூடும்.

தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டுப் பேசுவது நல்லது.

பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்கள் தங்களின் செயல்களில் மற்றவர்கள் குறைகளைக் காண நேரலாம்.
கலைத்துறையினருக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரியத் தடங்கல்கள் நீங்கும்.
**************
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
14ம் தேதி சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.

சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் நல்லது நடக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவபெருமானை வணங்குவது நன்மைகளைத் தரும். தடைபட்ட காரியம் தடைகள் நீங்கி இனிதே நடக்கும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x