கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள், மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள், மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை
Updated on
3 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

14ம் தேதி சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.
பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.

ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலானாலும் எதிர்பார்த்தபடி கிடைப்பது சிரமம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.

உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினர் பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எந்த விஷயத்திலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லாக் கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
*************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
14ம் தேதி சூர்யன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் சப்தம ஸ்தானத்தில் புதன் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது நல்ல மாற்றங்களைக் கொடுக்கும்.
வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் நீங்கும். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது
14ம் தேதி சூர்யன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் சந்தோஷம் ஏற்படும்.

அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் வேகமாக நடக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும், சுமாராக இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த காரிய தாமதம் நீங்கும்.
மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in