Published : 11 Mar 2021 09:53 AM
Last Updated : 11 Mar 2021 09:53 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - லாபஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது. 14ம் தேதி சூர்யன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு இரண்டாம் இடமான ரிஷபத்தில் சஞ்சாரம் செய்வது நன்மையைத் தரும்.

தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
ராசிக்கு 8ல் கேது சஞ்சாரம் செய்வதால் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்க விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள்.
பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தேவி ஸ்ரீகருமாரியம்மனை வணங்கி வாருங்கள். எல்லா பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
******************

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது. 14ம் தேதி சூர்யன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும்.

பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ராசியில் செவ்வாய் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை ச்சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியைப் பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வாருங்கள். மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
******************

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - விரய ராசியில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

14ம் தேதி சூர்யன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் அனைத்து நன்மைகளும் ஏற்படும்.

ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

ராசிக்கு இரண்டாமிடத்தை சனி பார்ப்பதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்கள் வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: உப்பிலியப்பன் மற்றும் பூமிதேவியை வணங்கிவாருங்கள். முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x