Published : 04 Feb 2021 01:14 PM
Last Updated : 04 Feb 2021 01:14 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் சுபச் செலவுகள் உண்டாகும்.

எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. மன திருப்தி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்கள், அடுத்தவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையற்ற செலவு ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களின் சந்தேகங்களை நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.
************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மற்றவர்களிடம் உங்கள் கருத்துகளைக் கூறும்போது அவர்கள் தவறாக அதைப் புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் மேலோங்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மைகளைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறு வதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மைகளைத் தரும். அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் அனுமனை வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
*****************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது

இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: சுவாமி ஐயப்பனுக்கு துளசி மாலை வணங்கி வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x