சனிப்பெயர்ச்சி பலன்கள் ; மூலம் நட்சத்திர அன்பர்களே! வாக்குவாதம் வேண்டாம்; எதிலும் கவனம் தேவை; எதிரிகள் தொல்லை; காரியத்தில் தடை! 

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; மூலம் நட்சத்திர அன்பர்களே! வாக்குவாதம் வேண்டாம்; எதிலும் கவனம் தேவை; எதிரிகள் தொல்லை; காரியத்தில் தடை! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மூலம்:

சனி பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு - கேது கிரக அமைப்பில் பிறந்தவர்களான நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களைக் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். உடல்நலனில் சிறப்பு கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பண வரவு இருக்கும்.

பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.

மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அர்ப்பணித்து வணங்கி வாருங்கள். வீண் அலைச்சல் குறையும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in