

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விசாகம்:
சனி பகவான் உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவருக்காக அதிகம் உழைப்பவர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும் விருதுகளும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு பாடங்களைப் படிப்பீர்கள்.
பரிகாரம்: அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தினமும் நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானை தரிசித்து வணங்கி வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும். முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும்.
********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |