Published : 26 May 2022 01:18 PM
Last Updated : 26 May 2022 01:18 PM

மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - மே 26 முதல் ஜூன் 1ம் தேதி வரை

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரக நிலை: ராசியில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது - என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் எந்த வேலையையும் நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள் :
இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும். குடும்பத்தில் எதையும் மனம் விட்டுப் பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்கள், அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
*************

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரக நிலை: ராசியில் செவ்வாய், குரு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள் :
இந்த வாரம் அனைத்து கிரக சஞ்சாரமும் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை வேண்டாம். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல்வாங்கலில் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x