Published : 26 May 2022 01:08 PM
Last Updated : 26 May 2022 01:08 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - மே 26 முதல் ஜூன் 1ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் பணவரத்து சிறப்பாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பது சிறப்பு. சின்ன விஷயங்களுக்குக் கூட உங்களுக்கு கோபம் வரலாம். எந்தக் கடினாமன சூழ்நிலையையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தை ராகு அலங்கரிக்க குரு பார்க்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் பகை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தாமதம் அகலும். குடும்பத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் மகிழ்ச்சி உண்டாகலாம். பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பணவரவு இருக்கும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
**************

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரக நிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசியில் குரு சஞ்சாரத்தால் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது நல்லது. எந்தச் செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. பெண்களுக்கு சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.
*************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் திறமைகள் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு எதையும் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஆலயத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு அருகம்புல்லை அர்ப்பணித்து வணங்க நன்மைகள் ஏற்படும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x