Published : 22 Jul 2021 04:04 PM
Last Updated : 22 Jul 2021 04:04 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள், ஜூலை 22 முதல் 28ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன், செவ்வாய், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:
இந்த வாரம் வெற்றி உண்டாகும். எடுத்த காரியத்தைத் திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.
கூட்டுத் தொழில், வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஒவ்வொரு காரியத்தையும் கவனமாகச் செய்வீர்கள். பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. ஆனாலும் மனதை தளர விட வேண்டாம். முன்னேற்றப் பணிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் கவனம் தேவை. மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன்
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளுக்கு வெள்ளை நிறப் பூவில் அர்ச்சனை செய்யுங்கள். வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
****************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயனசயன போக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் எதிர்பாராத காரியங்கள் நடந்தேற வாய்ப்பு உண்டு. வெற்றியால் மனம் மகிழ்ச்ச்சியில் திளைக்கும். கடந்த காலத்தில் இருந்த துன்பங்கள் சற்றென்று விலகும். முயற்சிகள் நல்ல பலன்களைத் தரலாம்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும். கலைத்துறையினருக்கு சில நட்பு வட்டாரங்களால் தொல்லைகள் வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு தெளிவான சிந்தனையும் வெற்றிக்கான வழிகளும் தெரிய வரும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – திங்கள்
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
*************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - அயனசயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள் :
இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் சற்று தாமதமாக ஏற்பட்டாலும் முடிவில் சாதகமாக முடியும். மனதில் துணிச்சல் ஏற்பட்டு தைரியத்துடன் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.

எதிர்பார்த்த நன்மையை விட கூடுதலான நன்மையான செய்திகள் வரக் கூடும். உங்களது எண்ணப்படியே காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான வங்கிக் கடன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கவுரவம் உயரும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பதவிகள், மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியருடன் கலந்து கொள்வது நல்லது. உயர் கல்விக்கு விண்ணப்பித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன்
பரிகாரம்: புதன்கிழமை ஸ்ரீநாராயணீயம் சொல்லி வாருங்கள். எல்லாக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். நன்மைகள் நடக்கும்.
**********************


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x