Published : 22 Jul 2021 03:26 PM
Last Updated : 22 Jul 2021 03:26 PM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், ஜூலை 22 முதல் 28ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:
இந்த வாரம் மன திருப்தியுடன் காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள்.

புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை வழங்குவதைத் தவிர்க்கவும்.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நல்ல மனிதர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போதும் வெளியூர்களுக்குச் செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்பீர்கள். அதற்குத் தேவையான பண வசதியும் மேலிடத்திலிருந்து கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். தேர்வுகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
*****************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கடுமையான முயற்சிகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதாரணமாகப் பேசுவது நல்லது.

வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பெண்கள் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். எதிர்கால எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் படிப்புகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
*************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:
இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

மற்றவர்கள் மீதான நம்பிக்கை மேலோங்கும். அனைவருக்கும் உதவி செய்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அதனால் உங்களுக்கு நன்மையே விளையும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். கலைத்துறையினருக்கு வேலையில் தொய்வு ஏற்படலாம். . எனவே கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. சக மாணவர்களின் உதவி கிடைக்கும். .

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் - சனி
பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று அவல் நைவேத்தியம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x