Published : 27 May 2021 11:42 AM
Last Updated : 27 May 2021 11:42 AM

மகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் சனி(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது துரிதமாகும். பணவரத்து அதிகமாகும்.

பூர்வீகச் சொத்துகளில் இருந்து பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும்.

வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும்போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளைச் செய்வது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் பேசுவது நல்லது.

எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகளில் இருக்கும் தடைகள் அகலும்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சக மாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
*******************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரக அமைப்பு உள்ளது.

29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதையும் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு காணப்படும்.

தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்குநேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் ஸ்தானம் மிகவும் வலுவாக இருக்கிறது. தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது.

போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும்.

கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் ஏற்படும்.

மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
*****************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பது சிறப்பு. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

பெண்களே! உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு தொலை தூரத் தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x