Published : 15 Apr 2021 05:22 PM
Last Updated : 15 Apr 2021 05:22 PM

துலாம், விருச்சிகம், தனுசு  வார ராசிபலன்கள்; ஏப்ரல் 15 முதல் 21ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அ.சா) - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் ராசியை ராசிநாதன் சுக்கிர பகவான் சூரியன் - புதனுடன் இணைந்து ராசியைப் பார்க்கிறார். அவரது பார்வை பணவரத்தை அதிகப்படுத்தும். சுபச்செலவு உண்டாகும்.

சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதைச் செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

அரசியல்வாதிகளுக்கு அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
***************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி - சுகஸ்தானத்தில் குரு (அ.சா) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு எட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாகப் பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும்போதும், ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் அவசியம்.

ராசிக்கு 6ல் சூரியன் - புதன் - சுக்கிரன் இணைந்து இருப்பது எண்ணியதைச் செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும்.
தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டுப் பேசுவது நல்லது.
பிள்ளைகள் எதிர்கால நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம்.

கலைத்துறையினருக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.
*****************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும்.

எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின்போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம்போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் இருக்க - செவ்வாய் பார்க்கிறார். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களும் அனுகூலம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவபெருமானை வணங்குவது நன்மையைத் தரும். தடைபட்ட காரியம் தடைகள் நீங்கி இனிதே நடைபெறும்.
**************
.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x