Published : 04 Apr 2021 05:55 PM
Last Updated : 04 Apr 2021 05:55 PM

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; ரேவதி நட்சத்திர அன்பர்களே! மதிப்பு கூடும்; காரியத்தில் வெற்றி; கூடுதல் பொறுப்பு; வருமானம் பெருகும்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரேவதி:

கிரகநிலை:

ராகு பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பதினேழாவது நக்ஷத்ரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

தனது வாழ்க்கையே சேவைக்காக அர்ப்பணிக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும்.

அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது.

+: கடன்களை தீர்ப்பதற்கு வழி பிறக்கும்
-: நண்பர்கள் - உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை.
மதிப்பெண்: 73%
வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் வழிபாடு செய்யுங்கள். மகாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள்.
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x