Published : 03 Apr 2021 05:04 PM
Last Updated : 03 Apr 2021 05:04 PM

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; மூலம் நட்சத்திர அன்பர்களே! மனக்குழப்பம்; வயிற்றுக் கோளாறு; வீண் வாக்குவாதம் வேண்டாம்; பண வரவு உண்டு! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மூலம்:

கிரகநிலை:

ராகு பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

அனைத்து விஷயங்களிலும் நேர்மையும் நிதானமும் ஒழுக்கமும் கொண்டு வாழ்வில் முன்னேறும் மூல நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டுச் செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

+: பணவரத்து அதிகரிக்கும்
-: எதிர்பாராத செலவுகள் உண்டாகும்
மதிப்பெண்: 65%
வணங்க வேண்டிய தெய்வம்: சித்தர்களையும் மகான்களையும் வணங்கி வாருங்கள்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x