Published : 01 Apr 2021 01:46 PM
Last Updated : 01 Apr 2021 01:46 PM

பிலவ தமிழ் புத்தாண்டு பொது பலன்கள் (2021 - 2022) ; நாட்டுக்கு நல்ல திட்டங்கள்; கொள்ளைகளால் தொல்லை; விளைச்சல் பெருகும்; ரியல் எஸ்டேட் வியாபாரம் ஏற்றம்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி பின்னிரவு - ஸ்ரீபிலவ வருஷம் உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 01ம் தேதி முன்னிரவு - 14.04.2021 - அன்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு வியாழக்கிழமை முன்னிரவு - சுக்ல பக்ஷ த்வீதியையும் - பரணி நட்சத்திரமும் - ப்ரீத்தி நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் - மகர லக்னமும் - மேஷ நவாம்ச லக்னமும் - மேஷ சந்திரா லக்னமும் - கன்னியா நவாம்ச சந்திரா லக்னமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 01.48க்கு (உதயாதி நாழிகை: 49:11க்கு) மகர லக்னத்தில் ஸ்ரீபிலவ வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - திருவோணம் 1ம் பாதம் - சந்திர சாரம்
சூர்யன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - பரணி 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
செவ்வாய் - மிருகசீரிஷம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
புதன் - அஸ்வினி 2ம் பாதம் - கேது சாரம்
குரு - அவிட்டம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம் - அதிசாரம்
சுக்ரன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சனி - திருவோணம் 1ம் பாதம் - சனி சாரம்
ராகு - ரோகிணி 3ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - கேட்டை 1ம் பாதம் - புதன் சாரம்

சுக்கிரன் தசை இருப்பு: 10 வருஷம் - 03 மாதம் - 05 நாள்



பிலவ வருஷத்தின் நவநாயகர்கள்:

ராஜா - செவ்வாய்
மந்திரி - புதன்
அர்க்காதிபதி - செவ்வாய்
மேகாதிபதி - செவ்வாய்
ஸஸ்யாதிபதி - சுக்கிரன்
சேனாதிபதி - செவ்வாய்
இரஸாதிபதி - சூர்யன்
தான்யாதிபதி - குரு
நீரஸாதிபதி - சுக்கிரன்
பசுநாயகர் - கோபாலன்

பிலவ வருஷ வெண்பா:

பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளான்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
- இடைக்காடர் வாக்கு

பிலவ தமிழ்ப் புத்தாண்டு பொது பலன்கள்:

இந்த பிலவ ஆண்டு வெண்பாவின்படி, மழை குறைவாக இருப்பதும், மழை நீர் சேமிப்பு இன்றி கடலில் கலக்க நேரும். மேகாதிபதி செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும், சுக்கிரன் செவ்வாய் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் பல புதிய வியாதிகள் உற்பத்தி ஆகும். சித்திரை மீ வருடபிறப்பு புதன்கிழமை வருவதாலும் - ஆடி மீ.5ம் தேதி புதன்கிழமை வருவதாலும் நல்ல மழைப் பொழிவு உண்டு.

மத்திய மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை நல்லவிதமாகச் செயல்படுத்த நேரும். புதிய வைரஸ் நோய்களால் கால்நடைகள் கடுமையாக பாதிக்க நேரிடும். ஆலைகளில் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும்.

மருத்துவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அயல்நாட்டில் புழுதிக் காற்று சூறாவளி மற்றும் பலமாகத் தாக்க நேரும். தான்யாதிபதி குரு 2-ஆம் ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்து வியாபாரிகளும் பெரும்பாலும் ஆன்லைன் வியாபாரம் செய்ய நேரும்.

மளிகை - காய்கறி- கனிவகை-தான்யம் போன்றவை யாவும் விலை அதிகரிக்கும். நீரஸாதிபதி சுக்கிரன் மேஷத்தில் நட்பு கிரஹமாக இருப்பதால் கோயில் அர்ச்சர்களுக்கு யோகம் உண்டு. அறநிலையத்துறையினால் மாதச் சம்பளம் கணிசமாக கிடைக்கும்.

இந்த பிலவ ஆண்டு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும். அயல்நாடுகள் மூலமாக முக்கியமாக ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஒத்துழைப்புடன் மத்திய அரசாங்கம் பல முதலீடுகளை ஏற்க நேரிடும்.

திருட்டு, கொள்ளை முதலான சம்பவங்கள் அதிகமாக இருக்கும். வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் உடனுக்குடன் முடிக்க நேரும்.

இந்த பிலவ ஆண்டில், புதிய பல நோய்கள் ஏற்பட்டு மக்களுக்குக் கடுமையாக பாதிப்புகள் ஏற்படும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.


ராஜா செவ்வாய் பலன்:
குறைந்த அளவு மழை - அதிகமான வெப்பம் - தீயினால் ஆபத்து - தேவையற்ற போர் பதற்றம் - வாகன விபத்துகள் ஏற்படலாம். பூமி மனை வீடு அவற்றைச் சார்ந்த பொருட்கள் அதிக அளவு விலை ஏறும். ரியல் எஸ்டேட் வியாபாரம் ஏற்றம் பெறும்.

மந்திரி புதன் பலன்:
புயலால் மட்டும் மழை உண்டு. பயிர் விளைச்சல் பெருகும். பாப சிந்தனை அதிகரிக்கும்.

அர்க்காதிபதி செவ்வாய் பலன்:
காற்று அதிகமாக வீசும். மேகங்கள் கலையும். மழை சொற்பமாக இருக்கும். விலைவாசி கடும் ஏற்றம் பெறும்.

மேகாதிபதி செவ்வாய் பலன்:
அதிகமான காற்று வீசும். புயல் ஏற்படும். சிகப்பு தான்யங்கள் அதிகரிக்கும்.

ஸஸ்யாதிபதி சுக்கிரன் பலன்:
புஷ்ப விளைச்சல் அதிகமாகும். வாசனை வஸ்துக்கள் அதிகரித்தலுடன் - அதிக விற்பனையும் உண்டாகும்.

சேனாதிபதி செவ்வாய் பலன்:
தீ விபத்துக்கள் உண்டு. எல்லைகளில் போர் பதற்றம் ஏற்படும். மக்கள் போராட்டம் அதிகமாகும்.

இரஸாதிபதி சூர்யன் பலன்:
நூதனமான முறையில் எண்ணெய் உற்பத்தி உண்டாகும். எண்ணெய் விலை குறையும்.

தான்யாதிபதி குரு பலன்:
தான்யங்கள் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அளவான மழையால் நீர் நிலைகள் நிரம்பும்.

நீரஸாதிபதி சுக்கிரன் பலன்:
திடப்பொருள்கள் உற்பத்தி பெருகும். பட்டு ஜவுளி உற்பத்தி அதிகமாகும்.

மகர சங்கராந்தி பலன்
இந்த ஆண்டு (2022ம் ஆண்டு) வெள்ளிக்கிழமை தை மாதம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நிறையவே நடந்தேறும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். பெண்களுக்கு சந்தோஷமும் அமைதியும் கிடைக்கப் பெறுவார்கள். .


கிரக மாற்றங்கள்:
இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x