Published : 18 Mar 2021 10:42 AM
Last Updated : 18 Mar 2021 10:42 AM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு, சனி - தனவாக்கு ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது
18ம் தேதி சுக்கிரன் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.

மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும்.

வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள்.

பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சினைகள் குறையும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகளுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் விலகும். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
*****************************************************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன், சுக்கிரன் - தன ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.
18ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நீங்கள் சோம்பலை ஒதுக்கி விடுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

மன உறுதி அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.

எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்குத் தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்.

வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் மன உறுதி ஏற்படும். கலைத்துறையினருக்கு சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனைக் குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உடல் ஆரோக்கியத்தைத் தரும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
*****************************************************************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
ராசியில் ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி - விரய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

18ம் தேதி சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும்.

ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும்.

டுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x