Published : 18 Mar 2021 09:04 AM
Last Updated : 18 Mar 2021 09:04 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - லாபஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

18ம் தேதி சுக்கிரன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் தன ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும்.

மாணவர்கள் கவன த்தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: மஹாகணபதிக்கு தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். அருகம்புல் மாலை சார்த்துங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.
*****************************************************************
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

18ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் வீண் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உள்ளது. மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டுவிடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.

க்கம்பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு காரிய வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்கி வாருங்கள். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும்.
*****************************************************************
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - விரய ராசியில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

18ம் தேதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. பணவரத்து கூடும்.

எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும்.எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: பெருமாளை வணங்கி வாருங்கள். துளசி மாலை சார்த்துங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x