Published : 11 Feb 2021 11:26 AM
Last Updated : 11 Feb 2021 11:26 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள், பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 5ல் சூரியனுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது பணவரத்தை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் வீண்செலவு நீங்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு மனதில் உறுதி அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு பல நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின்மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
********************************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:

ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருக்கும் இழுபறியான நிலை மாறும். ராசிக்கு 4ல் சூரியன் சுக்கிரன் இணைந்து இருப்பது எண்ணியதை செய்து முடிக்க முடியும்.

பாக்கியஸ்தானம் பலம் பெற்று இருப்பதால் பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் கிடைக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறைவதற்கு மனம் விட்டுப் பேசுவது நல்லது.

பிள்ளைகள் எதிர்கால நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு அவர்களின் செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம்.
கலைத்துறையினருக்கு தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் தேடி வரும். \
மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரியத் தடங்கல் நீங்கும்.
*************************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம்போல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: சித்தர்களை வணங்குவது நன்மையைத் தரும். தடைபட்ட காரியத்தில் இருந்த தடைகள் நீங்கி அனைத்தும் சுபமாக நடந்தேறும்.
***************************
*

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x