Published : 28 Jan 2021 01:51 PM
Last Updated : 28 Jan 2021 01:51 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன், குரு, சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது

30ம் தேதி சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள்.

வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைச் செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலரும் வருகின்ற நிலை ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகும். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருந்து வரும்.

மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனி பகவானை வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் குறையும். வேலைப் பளு குறையும்.
*********************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எடுக்கும் காரியங்களை செய்வதற்கு அனுபவ அறிவும், செயல்திறனும் அதிகரிக்கும்.

உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வாழ்க்கைத் தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்து முடிப்பது நன்மைகளைத் தரும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மைகளைத் தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். உஷாராக இருங்கள்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்கும்போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுங்கள். எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
***************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும்.

மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும்.

தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும்.

மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கி வாருங்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x