Published : 13 Jan 2021 11:19 AM
Last Updated : 13 Jan 2021 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - ஜனவரி 14 முதல் 20ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாரம் வீண்குழப்பம் அகலும். எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத சுபச்செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும்போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல்லைப் பெற நேரிடும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களுடைய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது அவை போய்ச் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சுகளைத் தவிர்ப்பதும் நன்மைகளைத் தரும். கணவன் மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

பெண்கள், எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மைகளைத் தரும்.

கலைத்துறையினருக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
*****************************

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - விரய ராசியில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும்.

ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களைச் சுற்றி வருபவர்களால் செலவுகள் உண்டாகும். திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டைகள் ஏற்பட நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது.

வீண் பேச்சைக் குறைப்பது நன்மைகளைத் தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மைகளைத் தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ஒற்றுமையையும் நன்மையையும் தரும்.

பெண்கள், வீண்பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியைத் தரும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும். மாணவர்கள், நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா செல்வங்களும் வந்துசேரும். கடன் பிரச்சினைகள் தீரும்.
*********************

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - லாப ராசியில் செவ்வாய் - விரய ராசியில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் எந்தவொரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மைகள் உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழிவகைகள் உண்டாகும்.

தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்கப் பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள், எந்தவொரு காரியத்தையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தொலை தூரத் தகவல்கள் நல்ல தகவலாக வரும்.

அரசியல்வாதிகள் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வாருங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x