Published : 31 Dec 2020 12:42 PM
Last Updated : 31 Dec 2020 12:42 PM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்;  (டிசம்பர் 31 - ஜனவரி 6ம் தேதி வரை)

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் புதன், குரு, சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - விரய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் ராசிநாதன் சனி சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும்.

பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும்.

எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். வாழ்க்கைத் துணை மூலம் நன்மை உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு தடைப்பட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடிதப் போக்குவரத்து சாதகமான பலன்களைத் தரும்.
அரசியல்வாதிகளுக்கு சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். கடன் தொல்லை குறையும். காரியத் தடைகள் நீங்கும்.
************************

கும்பம்

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரய ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சினைகள் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் தரும்.

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.

நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும்.
பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைக்கண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். குடும்பக் கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
**********************

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனைச் செய்து முடிக்க நேரிடும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாகப் போவது நல்லது.

பெண்களுக்கு நிதானமாகப் பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு திருப்பங்கள் ஏற்படும்.
மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குரு பகவானை வழிபட்டு வாருங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x