Published : 02 Dec 2020 03:34 PM
Last Updated : 02 Dec 2020 03:34 PM

கடகம், சிம்மம், கன்னி - வார ராசிபலன்கள், டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் எதிர்பார்த்த செல்வச் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் வாக்குவன்மையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனம் நெகிழும்படியான சூழல் உருவாகும். மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதிகளுக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

உடல்நலனைப் பொறுத்தவரை மறைவிடங்களில் இருந்த வந்த பிரச்சினைகளில் முன்னேற்றம் காணப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் இருந்த தடைகள் விலகும்.

உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக நேரம் உழைக்க நேரிடும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புகழும் பாராட்டுகளும் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில வாய்ப்புகளும் கிடைக்கலாம். வேலையில் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் வாக்கு கொடுக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.

பெண்கள் சிக்கலான விஷயங்களைக் கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதில் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாகச் செயல்படுவது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
--------------------------------------------------------------

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் உங்களின் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் பெறும். வெளியூர் செல்லும்போது சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். சில நேரங்களில் நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து சில காரியங்களை நடத்தி வெற்றி காண்பீர்கள்.

தம்பதிகளிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். உடல் உபாதைகள் குறையும். உங்களின் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நன்மையைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறைமையைக் கண்டறிய மேலிடம் சில சோதனைகளைத் தரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றியும் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உங்களுக்கு எதிரானவர்கள் உங்களின் பலத்தைப் புரிந்து கொண்டு விலகி விடுவார்கள்.

பெண்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும்போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுவீர்கள். சந்தோஷங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும் சிவபெருமானையும் வணங்கினால், எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
---------------------------------------

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

பணவரத்து அதிகரிக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும்.

குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும், வெகு விரைவில் குணமாகும் சூழல் உள்ளது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணாமல் இருப்பதற்கு கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினர் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எந்த முயற்சியையும் முழு முயற்சியுடன் செய்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டம் பெருகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள்.

பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வாருங்கள். சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
---------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x