Published : 22 Nov 2020 08:16 PM
Last Updated : 22 Nov 2020 08:16 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம்

தொடர்ச்சியான நன்மைகள் நடப்பதால் மன மகிழ்ச்சி அடையக் கூடிய வாரம்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவீர்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக முக்கியத் தேவைகள் பூர்த்தியாகும்.
அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த அழுத்தங்கள் முற்றிலுமாக மாறும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும், ஒரு சிலருக்கு அயல்நாட்டில் இருந்து முதலீடுகள் கிடைக்கலாம்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
சொத்து தொடர்பான பிரச்சினைகள் மிக எளிதாகத் தீரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்க கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் மிகப்பெரிய வருமானத்தை தரக்கூடியதாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

செவ்வாய் -
திடீர் பண வரவுகளால் மனம் மகிழும் நாள். கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் தீரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

புதன் -
வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் வேலைகளைப் பார்க்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரி போக்கு இருக்கும்.

வியாழன் -
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியை சந்திக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தேடி வரும். இதுவரை இருந்து வந்த முக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நாளாக இருக்கும்.

வெள்ளி -
குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். அவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். அலுவலகத்திலும் நிதானப் போக்கைக் கடைபிடியுங்கள். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தைக் கையாளும்போது அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.

சனி -
தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

ஞாயிறு -
நெருங்கிய நண்பர்கள் மூலமாக மிகப்பெரிய உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலன்கள் தரும்.
************

பூராடம் -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடித்து மனதிருப்தி ஏற்படக்கூடிய வாரம்.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

தந்தை வழி சொத்துகள் தொடர்பாக பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு முயற்சி சாதகமாக இருக்கும். தற்போது பணிபுரியும் அலுவலகத்திலேயே வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். கடன் தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும். சகோதரரிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் தீரும்.

மாணவர்கள் கல்வி தொடர்பாக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடித்து மனநிறைவு கொள்ளும் நாள். அலுவலகப் பணிகளில் சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் தொடர்பாக பயணம் ஒன்று ஏற்படும்.

புதன் -
அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு முடிவாக இருந்தாலும் நன்கு ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கடன் கொடுப்பது கூடாது.

வியாழன் -
எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். சொத்து தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கக் கூடிய நாள்.

வெள்ளி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும். உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.

சனி -
பணவரவு சரளமாக இருக்கக்கூடிய நாள். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு -
செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வழிபாடு செய்யுங்கள். குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*********************

உத்திராடம் -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக் கூடிய வாரமாக இருக்கும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். தேவையான வங்கிக் கடன் முதலான உதவிகள் எளிதாகக் கிடைக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீரும். சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்ப நலனுக்காக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட குடும்பத்தாருடன் ஆலோசனை செய்வீர்கள். சுயதொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் ஆரம்பிப்பது போன்ற ஆலோசனைகளை குடும்பத்தாருடன் இணைந்து முடிவெடுப்பீர்கள்.

செவ்வாய் -
மன நிறைவைத் தரக் கூடிய நாள். குழப்பங்கள் தீரும். பணவரவு தாராளமாக இருக்கும். இன்று எடுத்து செய்யும் அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமணம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரப் பயணங்களில் ஆதாயம் கிடைக்கும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பண வரவு ஏற்படும்.

வெள்ளி -
உறவினர்கள் நண்பர்கள் என பலருக்கும் உதவிகள் செய்ய வேண்டியது இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சனி -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வியாபாரம் தொடர்பான செய்தி கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல்நலம் திருப்திகரமான முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வீட்டு பராமரிப்புச் செலவுகள் செய்வது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x