Published : 29 Oct 2020 11:52 AM
Last Updated : 29 Oct 2020 11:52 AM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; அக்டோபர் 29 முதல்  நவம்பர் 4ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலையைச் செய்ய நேரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளைச் செய்ய முடியாத நிலை உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும்.

பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். எந்தக் காரியங்களிலும் குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்பது நலம். பெண்களுக்கு மனத்தடுமாற்றம் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்கள் அதிக நேரம் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: : திங்கள், வெள்ளி;
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். குடும்பக் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
*********************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்குவன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.

மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறியபடி காரியங்களைச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: பிரத்தியங்கிரா தேவியை வணங்கி தீபம் ஏற்றி வணங்குங்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும்.
****************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் பணத்தேவை பூர்த்தியாகும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு பணத் தேவை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும்.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: பெருமாளை வணங்கி வாருங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x