Published : 29 Oct 2020 11:35 AM
Last Updated : 29 Oct 2020 11:35 AM

துலாம், விருச்சிகம், தனுசு  ; வார ராசிபலன்; அக்டோபர் 29 முதல்  நவம்பர் 4ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இந்த வாரம் முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: நரசிம்மரை வணங்கி வாருங்கள். குடும்பப் பிரச்சினை, தொழிற்பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.
*********************************************************************************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும்போது வீண் பழிச்சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போகும்.

எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்குள் பல தடைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும்.

கலைத்துறையினருக்கு நிதானமாக இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களைச் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.
***********************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் ராசியாதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும்.

தடைபட்ட பணம் வந்து சேரும். உங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். பாக்கியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதுர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும்.

செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். பெண்களின் செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

அரசியல்துறையினருக்கு தடைப்பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.


அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x