Published : 01 Oct 2020 05:13 PM
Last Updated : 01 Oct 2020 05:13 PM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் பணவரத்து கூடும்.

ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களைப் படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்:கிழக்கு, தெற்கு
எண்கள்:1, 3, 9
நிறங்கள்: சிவப்பு
பரிகாரம்: துர்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

**************************************

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் எதிலும் சமயோசிதமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது.

ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, பண நிலுவை வந்து சேர தாமதமாகலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.


பரிகாரம்: விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
எண்கள்: 2, 6
நிறங்கள்: வெள்ளை, பச்சை

**************************************

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் உங்கள் அணுகுமுறையில் நிதானம் இருக்கும்.

அனைத்து கிரகங்களும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. வீண்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும்.

நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும்.
பெண்களுக்கு பணவரத்தில் தாமதம் இருக்கும். கலைத்துறையினருக்கு யாரிடமும் நிதானமாகப் பேசி பழகுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
எண்கள்: 2, 5, 6
நிறங்கள்: பச்சை, வெள்ளை
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வாருங்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், மனோபயம் குறையும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x