Published : 20 Sep 2020 03:28 PM
Last Updated : 20 Sep 2020 03:28 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

அதிக நன்மைகள் நடைபெறும் வாரம்.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு சரளமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

இதுவரை விற்க முடியாமல் இருந்த பூர்வீகச் சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழிமுறைகளை கையாண்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு தடைபட்டிருந்த முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். லாபத்தில் குறைவிருக்காது. உணவகம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலும் தீரக்கூடிய நாளாக இருக்கும்.

செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள். குழந்தைகளிடமும், வாழ்க்கைத் துணையிடம் இணக்கமாக இருங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் பணிந்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அலட்சியமாக யாரையும் பேச வேண்டாம்.

புதன்-
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். திருமணம் தொடர்பாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். பணத் தகராறு விஷயமாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு சமாதானம் ஏற்பட்டு பிரச்சனை சரியாகக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக கையாளக்கூடாது. வீண் செலவுகள் ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகளில் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் வியாபாரத்திற்கு கிடைக்கும்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கருடாழ்வாரை வணங்குங்கள். கருடாழ்வாருக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.
**********************

பூரம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

பணவரவு தாராளமாக இருக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டாகும்.

வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார விஷயங்களுக்காக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலுவலக சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யாரிடமும் எதற்காகவும் கோபத்தை காட்ட வேண்டாம்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு கருத்து கூறாமல் இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**********************

உத்திரம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இப்போது சொந்த வீடு அமையும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும்.

தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகி அரசின் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும்.

மாணவர்களுக்கு புதிய கல்வி அல்லது கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.


வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாக பேசுங்கள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார நிமித்தமாக பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சில எதிர்பாராத பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x