Published : 10 Sep 2020 10:36 AM
Last Updated : 10 Sep 2020 10:36 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 10 முதல் 16ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரத்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளைக் கவனிப்பது நல்லது.

குடும்பாதிபதி சுக்கிரன் சுக ராசியில் இருப்பது பலம். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள். பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
***********************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் ராசியில் ராகுவின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. திடீர் டென்ஷன் ஏற்படலாம்.

நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களைச் செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை.

பெண்களுக்கு நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்துறையினர் முனனேற்றம் அடைவார்கள்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: அம்மனை வணங்கி வாருங்கள். எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனதில் நிம்மதி பிறக்கும்.
*********************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும்.

நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாகப் பேசுவது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு கூடும்.
கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு அதிக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x