Published : 14 Jul 2020 06:18 AM
Last Updated : 14 Jul 2020 06:18 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துகள்கூட சீரியசாகக் கூடும்.

ரிஷபம்: வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அடிக்கடி தலைதூக்கும். பழைய பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சியுங்கள்.

மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பணவரவு உண்டு.

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். பணம் வரவு திருப்தி தரும்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

துலாம் : சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதித்து காட்டுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தனுசு: மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.. வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த சுணக்கம் நீங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x