Published : 28 May 2020 09:21 AM
Last Updated : 28 May 2020 09:21 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.


கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம். கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றைக் கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.


தொழில் ஸ்தானாதிபதி சனியின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம். கவனம் தேவை.


பெண்களுக்கு: புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு : மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.


மாணவர்களுக்கு : சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, பழுப்பு
எண்கள்: 1, 9
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


இந்த வாரம் எல்லாக் காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும்.


பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.


வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.
பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்.


கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் கூடும்.


மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மிதுனம்

(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதைச் செய்ய முற்படுவீர்கள்.


தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.


வாழ்க்கைத் துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.


தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும்.


உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.


பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். கலைத்துறையினர் திட்டமிட்டுச் செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகள் எடுக்கு முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 1, 5
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பணக் கஷ்டம் தீரும்.
*********************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x