Published : 24 May 2020 01:40 PM
Last Updated : 24 May 2020 01:40 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை)

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் அகலும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் இந்த வாரம் சுமுகமாக முடிவடையும். எனவே இந்த வாரம் முயற்சி எடுத்து சொத்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது.
பணியிலிருந்த அழுத்தங்கள் முற்றிலுமாக விலகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.
வியாபாரம்.மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான நிலை இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். உடல்நலம் பாதித்த பெண்களுக்கு இப்போது முற்றிலுமாக உடல்நல பாதிப்பிலிருந்து வெளிவருவார்.
கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான நபர் உங்களைப் பரிந்துரைப்பார்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். வீட்டில் ஒரு சில மாற்றங்களைச் செய்வீர்கள். தந்தை வழி உறவினர்கள் தேடிவந்து உதவிகளைச் செய்வார்கள். சொத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள்.

செவ்வாய்-
எந்த ஒரு விஷயத்திலும் விழிப்பு உணர்வு தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன்-
ஆதாயம் தரும் விஷயங்கள் சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

வியாழன்-
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்களுக்கு ஒரு சில உதவிகளை செய்து தருவீர்கள். ஆலய வழிபாடு செய்ய நினைப்பீர்கள்.

வெள்ளி-
எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணங்கள் வேண்டாம். தவிர்க்கவும். கடன் வாங்காதீர்கள். உங்கள் எரிச்சலையும் கோபத்தையும் குழந்தைகளிடமும் வாழ்க்கைத்துணையிடமும் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படுத்தும் தகவல் கிடைக்கும்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
*****************************


பூரம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பத்தினர் உங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும்.
அலுவலகப் பணியில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும்.
மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் சூழ்நிலை இருக்கிறது.

செவ்வாய்-
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

புதன்-
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
எதிர்பார்த்த பண உதவி உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும்.

சனி-
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். வரவேண்டிய தொகை இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
வீட்டிலேயே குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சௌந்தர்யலஹரி பாராயணம் செய்யுங்கள் அல்லது இசை வடிவில் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். மனம் தெளிவாகும்.
*************************************


உத்திரம் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு சரளமாக இருக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது திருமணத் தேதி உறுதிப்படுத்தப்படும்.
தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களும் உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள்-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும்படியான தகவல் கிடைக்கும்.

செவ்வாய்-
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன்-
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாழன்-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தைப் போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி-
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு-
குழந்தைகளின் கல்வி மீதான அக்கறை தோன்றும். சகோதரர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கியமான சந்திப்புகள் ஏற்படும். பழுதான பொருட்களை சரி செய்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு நன்மைகளை அள்ளித்தரும். காலபைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும், பலன்கள் தந்தருளும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு சரளமாக இருக்கும்.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x