Published : 24 May 2020 01:16 PM
Last Updated : 24 May 2020 01:16 PM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம்
செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
நெருக்கடியான பிரச்சினைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தீர்த்து வெளிவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது ஒற்றுமையை அதிகரிக்கும்.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
தொழிலில் நிறைய அழுத்தங்கள் இருக்கும். அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய அளவுக்கு உதவிகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் நிதானமாகவே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள், வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கெனவே நின்று போயிருந்த ஒப்பந்தங்களும் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். பண உதவிகள் கிடைக்கும். மனதளவில் நம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் சிறந்த வருமானம் இருக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி தோன்றும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். இரண்டாவது குழந்தையின் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு வந்து நீங்கும்.

புதன்-
அலுவலக வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். வியாபார உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இன்று சுலபமாக முடிவடையும். வாகனப் பழுதுகளை முற்றிலுமாக நீக்குவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன்-
தேவை இல்லாமல் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். மனதில் சஞ்சலம் உண்டாகும். குடும்பத்தாரிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக இருங்கள்.

வெள்ளி-
சுப விஷயங்கள் பேசி முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வகையில் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். தொழிலுக்கு அரசு வழி சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தார் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு-
உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுங்கள். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். மனவருத்தம் ஏற்பட்ட நண்பருடன் மனம் விட்டுப் பேசி மீண்டும் நட்பை சரி செய்வீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
கந்த சஷ்டி கவசம் படியுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். மன நிம்மதி கிடைக்கும்.நினைத்தது நிறைவேறும்.
********************************


பூசம் -
உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.
கவலைகளை மறந்து பணியில் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
வாழ்க்கைத்துணையின் வேலையில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இப்பொழுது நீங்கும். வேலை உறுதி செய்யப்படும். தூரத்து உறவினர்களால் ஒரு சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியது வரும். நண்பர்களால் வீண் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.
வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒரு சில பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணம் நடந்து புத்திர பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டியது வரும். தொழில் மற்றும் வணிகம் செய்யும் இடத்திலும் இதே நிலை இருக்கும். பொருட்களை மாற்றுவது, இயந்திரங்களை மாற்றுவது முதலான செலவுகள் ஏற்படும். தொலைதூரத்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவியும் கிடைக்கும்.

செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். குழப்ப நிலைகள் மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.

புதன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒரு சில அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன்-
சற்றும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

வெள்ளி-
பேசும்போது நிதானமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். வெளியில் செல்லும்போது அக்கம்பக்கத்தினருடன் கவனமாகப் பழகுங்கள். குடும்பத்தினரிடம் அமைதியாக இருக்க வேண்டும். கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் இன்று கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு-
எதிர்பாராத பண வரவு ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியிலிருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் தொடரும்.
********************************************


ஆயில்யம் -
பம்பரமாகச் சுழன்று பணிகளை முடித்து மனநிறைவு ஏற்படக்கூடிய வாரம்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் தீரும்.
சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு புதிதாக கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனநிம்மதி ஏற்படும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த சலசலப்புகள் அகலும். குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். அவர்களுடைய படிப்புத் திறன் நம்பிக்கை தருவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான தகவல் கிடைக்கப்பெற்று மனநிம்மதி ஏற்படும்.

செவ்வாய்-
மன சஞ்சலம் ஏற்படும். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்த பின்பே முடிவுகளை எடுக்க வேண்டும். பண முதலீடுகள் செய்யும் வேலைகள் எதுவும் இன்று செய்ய வேண்டாம்.


புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். லாபம் இருமடங்காக கிடைக்கும்.

வியாழன்-
மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழும் நாள். செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். உங்களைப் பற்றி அவதூறுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதி அடையும் நாள். தொழில் தொடர்பாக அரசு உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.


சனி-
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் நீங்களாக சிக்கிக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். வீட்டு பராமரிப்புகளை நீங்களே முன்னின்று செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து சாதகமான நல்ல தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சண்முக கவசம் பாராயணம் செய்யுங்கள். ஆரோக்கியம் மேம்படும். குழப்பங்கள் தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x